தீவகத்து நினைப்பிருக்கு!!
ஆறாத காயங்கள்கண்டு
ஆறிய எம்மிதயமெங்கும்
தீராத நினைப்பாய்தினம்
தித்திக்கிறது தீவகத்துநினைப்பு
அறியாத வயதுதனிலே
அயலூர் செல்வதென்றால்
அன்னையின் முந்தானைபற்றி
அவள்பின் நிழலாய்சென்று
அல்லைப்பிட்டி சோதனையை
அச்சத்தோடு கடந்துபோனது
அடிமனதில் ஆழமாய்பதிந்திருக்கு
தட்டிவாகனங்களில் சிலநேரமும்
இ.போ.ச பேரூந்தில் பலநேரமும்
சாளரத்தின் அருகமர்ந்து
குன்றுங்குழிப் பாதையில்
குதூகலமாய் போனது
குறைவின்றி ஒவ்வொரு
கணமும் நினைவிருக்கு
ஊர்விட்டு நகருக்கு
நகர்வதென்றால் இருவழிபயணம்
பண்ணைவரை ஒருபயணம்
பண்ணையை தாண்டமறுபயணம்
நகருக்கு சென்றுதிரும்ப
நாளொன்றே தேவையானது
நகலாய் இன்னும்நினைப்பிருக்கு
கோவில் திருவிழாக்கெல்லாம்
அணியெடுத்துப் போவதும்
அன்னதானம் உண்பதும்
அறியாதவரை நட்பாக்குவதும்
அதிலும் நாகம்மாள்கோவில்
அன்று போனதெல்லாம்
இன்றுபோல் நினைப்பிருக்கு
கோலாகலமாய் கோவில்களில்நடக்கும்
கூத்துக்களும் கச்சேரிகளும்
சின்னமணிஐயாவின் வில்லிசையும்
கானமூர்த்தி பஞ்சமூர்த்தி கச்சேரியெல்லாம்
தாளம்போட்டே நிதம்
தவறாது பார்த்தது
தளர்வின்றி நினைவிருக்கு
கற்பகதருவின் வளத்தையெல்லாம்
பொய்யாய்களவாடி மாட்டாது
நுங்கு குடித்ததும் பனங்காய்
பொறுக்கி பணியாரம்சுட்டதும்
பாத்திபோட்டு ஒடியல்எடுத்ததும்
பால்மனசில் பசுமையாய் நினைவிருக்கு
வெற்றுப்பேணி சிரட்டையெல்லாம்
வெறுமைநேரம் நீக்க
பேணிப்பந்துக்கு பயன்பட்டதும்
பூத்தபூவரசில் வெட்டிய
கிட்டிப்புள் விளையாட்டும்
கிளித்தட்டு ஒப்பெல்லாம்
ஓயாது நினைவிருக்கு
ஐந்துரூபாய்க் காசுக்காய்
அம்மாவோடு செல்லப்போர்நடத்தி
செல்லன் அண்ணாவிடம்
பனிக்கூழ் வாங்கியதும்
தும்புமுட்டாசு தின்டதும்
வண்ணமிட்ட குதப்பிவெதுப்பிக்கு
சண்டைபோட்டது இன்னும்நினைப்பிருக்கு
ஆயிரமாயிரம் அனுபவம்
கண்ட என்மனதில்
இன்னும் அழியாத
ஆழ்அனுபவமாய் இருக்கு
#தீவகம்
தம்பாட்டியூர் நிவிதன்
ஆறிய எம்மிதயமெங்கும்
தீராத நினைப்பாய்தினம்
தித்திக்கிறது தீவகத்துநினைப்பு
அறியாத வயதுதனிலே
அயலூர் செல்வதென்றால்
அன்னையின் முந்தானைபற்றி
அவள்பின் நிழலாய்சென்று
அல்லைப்பிட்டி சோதனையை
அச்சத்தோடு கடந்துபோனது
அடிமனதில் ஆழமாய்பதிந்திருக்கு
தட்டிவாகனங்களில் சிலநேரமும்
இ.போ.ச பேரூந்தில் பலநேரமும்
சாளரத்தின் அருகமர்ந்து
குன்றுங்குழிப் பாதையில்
குதூகலமாய் போனது
குறைவின்றி ஒவ்வொரு
கணமும் நினைவிருக்கு
ஊர்விட்டு நகருக்கு
நகர்வதென்றால் இருவழிபயணம்
பண்ணைவரை ஒருபயணம்
பண்ணையை தாண்டமறுபயணம்
நகருக்கு சென்றுதிரும்ப
நாளொன்றே தேவையானது
நகலாய் இன்னும்நினைப்பிருக்கு
கோவில் திருவிழாக்கெல்லாம்
அணியெடுத்துப் போவதும்
அன்னதானம் உண்பதும்
அறியாதவரை நட்பாக்குவதும்
அதிலும் நாகம்மாள்கோவில்
அன்று போனதெல்லாம்
இன்றுபோல் நினைப்பிருக்கு
கோலாகலமாய் கோவில்களில்நடக்கும்
கூத்துக்களும் கச்சேரிகளும்
சின்னமணிஐயாவின் வில்லிசையும்
கானமூர்த்தி பஞ்சமூர்த்தி கச்சேரியெல்லாம்
தாளம்போட்டே நிதம்
தவறாது பார்த்தது
தளர்வின்றி நினைவிருக்கு
கற்பகதருவின் வளத்தையெல்லாம்
பொய்யாய்களவாடி மாட்டாது
நுங்கு குடித்ததும் பனங்காய்
பொறுக்கி பணியாரம்சுட்டதும்
பாத்திபோட்டு ஒடியல்எடுத்ததும்
பால்மனசில் பசுமையாய் நினைவிருக்கு
வெற்றுப்பேணி சிரட்டையெல்லாம்
வெறுமைநேரம் நீக்க
பேணிப்பந்துக்கு பயன்பட்டதும்
பூத்தபூவரசில் வெட்டிய
கிட்டிப்புள் விளையாட்டும்
கிளித்தட்டு ஒப்பெல்லாம்
ஓயாது நினைவிருக்கு
ஐந்துரூபாய்க் காசுக்காய்
அம்மாவோடு செல்லப்போர்நடத்தி
செல்லன் அண்ணாவிடம்
பனிக்கூழ் வாங்கியதும்
தும்புமுட்டாசு தின்டதும்
வண்ணமிட்ட குதப்பிவெதுப்பிக்கு
சண்டைபோட்டது இன்னும்நினைப்பிருக்கு
ஆயிரமாயிரம் அனுபவம்
கண்ட என்மனதில்
இன்னும் அழியாத
ஆழ்அனுபவமாய் இருக்கு
#தீவகம்
தம்பாட்டியூர் நிவிதன்
கல்லூரிப் புளியமரத்தின் புலம்பல்!
(காவாலூர் புனித அந்தோனியார் கல்லூரிக்கு முன் காவலனாய் நின்ற புளிய மரத்தின் புலம்பல்)
எவன் வந்து எங்கள் பேரான கல்லூரியை
எமன் போலக் குண்டினால் தகர்த்தானோ நானறியேன்
அவன் வைத்த குண்டுக்கு இரையாகிப் போயிருப்பேன்
கல்லூரிக் காவலனாய் இங்கே நான் இன்றுவரை நிற்பது அதிசயமே!
சன்னங்கள் பல வந்து என்னுடலைத் துழைத்திடினும்
நிலைகுலைந்து போகாது மரத்துப்போய் நிற்கின்றேன்
எத்திசை நோக்கிடினும் படையினரின் நடமாட்டம்
செய்வதறியாது தனியாக நின்று தவித்தேனே!
ஐயகோ! ஒரு நாள்:
இரவோடிரவாக எனது இடதுபுறக் கொப்பிரண்டை
படு பாதகமாய் வெட்டிச் சாய்த்தனரே
ஐயோ! என்று அலறினேனே என் செய்வேன்
வெட்டியவன் நல்லாய் இருப்பானோ, ஐயன்மீர்!
ஆறாத்துயரில் தேற்றுவாரின்றித் திகைத்தேனே
அந்தோ இன்னும் மாறவில்லை, இரண்டாண்டு கழியுமுன்னே
மீண்டும் அப்பாதகர்கள் வலக்கரத்தை வெட்டினரே
இரவில் நடந்த இந்தக் கோரத்தை யார் அறிவார்!
யாரிடம் நான் இத்துயரம் சொல்லி அழ
என் நிழலில் இளைப்பாறி மகிழ்ந்திட்ட
எனதருமைச் செல்வங்களே, பார் வாழும் பழைய மாணவரே!
எனதோலம் கேட்கிறதோ? உதவிட நீர் வருவீரோ?
கல்லூரிப் பெயர் தாங்கும் புனிதன் அந்தோனி
ஆலயத்தைக் கட்டுவித்த அருங்குரவர் தம்கையால்
நாட்டிவைத்த புளியமரம் நான் என்று சொல்லி
பெருமையுடன் இவ்விடத்தில் பல்லாண்டு வாழ்கின்றேன்
கல்லூரி கட்டுவித்த அருந்துறவி முதலாக
வந்த அதிபர்கள் எல்லோரும் என்னைப் போற்றி
நீரூற்றி வளர்த்து உருவாக்கி வளமாக வாழ வைத்தனர்
அன்று முதல் சடைத்துவளர்ந்து நிழல்பரப்பி நிக்கின்றேன்
புனித வளன் துறவியர்கள் அடியிட்ட்ட கல்லூரி
சைமன், சிறில், பேதுருப்பிள்ளையுடன்,
அலெக்ஸ் பிறதர் முதலானோர் மேன்மையுறச் செய்த
பேரான கல்லூரி என்பது நாடே அறிந்த உண்மை
அதிபர் திலகம் ஜோசப் அடிகளாரின்
பொற்காலம் மீண்டும் வருமோ?
காவலூர்க் கணிகலனாய்த் திக்கெட்டும்
வரலாற்றுப் பெருமை கண்ட அக்காலம் மறப்போமோ?
அன்பும், பண்பும் ஆளுமைத் திறனுக்கொண்ட
ஜோசப் அடிகள் ஒரு கடமை வீரனென்பர்
ஆற்றல் மிகு அவர்பணியால் ஆங்கிலக்கல்வி
அதீத வளம் பெற்று சிறப்பாய் வளர்ந்ததையா.
வளமான எதிர்காலம் வரும் என்று கனவு கண்டோம்
காலன் அவர் உயிரை கடிதிற்ப் பறித்தானே
ஊமை கண்ட கனவாக எல்லாமே சிதைந்ததுவே
என் செய்வோம் ஐயகோ நல்லார்க்கு காலமில்லை!
நீக்கிலாப் பிள்ளையொடு கருணாகரன் அடிகள் மற்றும்
ஜீவரெட்டினமும் அன்னாரை அடியொற்றி
கல்வியோடு விளையாட்டில் வெற்றி நடைபோட்ட
ஸ்ரனிஸ்லோஸ் அடிகளாரின் சேவை மறப்போமோ!
அல்பிரட் அடிகளாரும் மௌனமாய் வழிநடத்தும்
மரியாம்பிள்ளை அடிகளாரும் பண்பாளன்
சூசைப்பிள்ளை சுவாமியாரும் ஆண்டுயர்ந்த கல்லூரி
துறவிகள் பணிசெய்த ஏற்றமிகு காலம் ஐயா.
பாடசாலை முடிந்தவுடன் பஸ்சிற்கு காத்திருக்கும்
மாணவரும் ஆசிரியர் பெற்றோரும் செய்யும்
அரட்டைகளால் என்செவியே செவிடுபடும் - அருகே
கச்சான் விற்கும் பொன்னுக்கு கிளவிக்கும் நல்ல வியாபாரம்.
பள்ளிக்கு கள்ளம்போட்டு என்முதுகில் ஒளித்திருக்கும்
கள்ளச் சிறுவர்க்கு அடைக்கலமாய் நின்றிருப்பேன்
மதிய இடைவேளை ஆலயத்துக் கணியணியாய்
செல்லும் இளசுகளைக் கண்டு மனம் பூரித்திருப்பேன்!
கரம்பொனில் இருந்துவரும் ஜோர்ச் மாஸ்டர் என்றால்
திறம்பட ஆங்கிலத்தை கற்பித்த ஆசானென்பர்
கொச்சியில் இருந்து வந்த பொன்சேகா மாஸ்டர் ஒரு
விஞ்ஞானப் பேராசான் விளையாட்டுத்துறையிலும் மேதை.
அன்னாரின் சேவையிலே கல்லூரி உயர்ந்ததென்பேன்
நீக்கிலாப்பிள்ளை மாஸ்டரை நினைத்தாலே குலை நடுங்கும்
அவர் வரவே கூடாதென நேர்ந்திருப்பார் பலருண்டு
வில்லுக்கு விஜயன் போல் பிரம்படிக்கு மரியநாயகம்.
என் நிழலில் காத்திருந்து பிந்தி வரும் மாணவரை
வசமாகப் பிடித்து வைத்து பிரம்பாலே அடிப்பார் நன்றாய்
ஆறு அடிபட்டால் அடுத்தநாள் பிந்துவரோ
சிறுவர் திட்டுமொலி என்காதில் எதிரொலிக்கும்.
கணிதம் கற்ப்பிக்கும் விக்டர்பிலிப் மாஸ்டருடன்
ஆங்கில ஆசான் பிலிப்புப்பிள்ளை உயர் வகுப்புகளை
ஊக்கமுடன் வளர்த்தெடுத்தனர் உண்மை இது
நடித்து நயமாகக் கற்ப்பிக்கும் அலோய் மாஸ்டர் என அறிவேன்.
புவியியல் ஆசிரியர் நடராசா இந்தக் கல்லூரிக்கு
மறு வாழ்வளித்த வள்ளல் என்பேன்
குண்டடிபட்டு சிதைந்தழிந்த கல்லூரி மீண்டும் சீரமைப்புற்று
எழுந்து நிற்பதிந்த கனவானின் தயவாலே!
முன்பிருந்த சவரிமுத்து, அருளானந்தம், B .M .
என அன்புடன் அனைவரும் அழைத்த திட்ட
மனுவேற்பிள்ளை மாஸ்டராருடன் மற்றும்
ஜெராட் மாஸ்டர், நடராசா இவர்கள் இன்றில்லை.
Boxing நடராசா! ஆம் மாணவர்கள் என் நிழலில்
பட்டப்பேர் சொல்லிப் பலரை அழைப்பதை நான் கேட்பேன்
வாயிருந்தால் கண்டித்திருப்பேன் என் செய்வேன்
மனதில் குமைந்து மௌனமாக அழுத்திட்டேன்.
ஆசிரியர் சபாரெட்னம் அவரொரு கலைப் பொக்கிஷம்
நடமாடும் பல்கலைக் கழகம் என்றால் அது தகுமே
இலக்கிய பாடத்தை நயம்படக் கற்பித்து
மாணவர் கவனத்தை ஈர்த்துவிடும் பேராசான்!
அடக்கமும் அறிவும் கொண்ட ஒரு மேதை - இன்னும்
ஆர்வமுடன் எழுதிவரும் எழுத்துலகச் சிற்பி
இத்துணை ஆற்றல் பெற்ற ஆசான்களின் சேவையினால்
வளம் பெற்று உயர்ந்திட்ட கலைக் கூடம் நமது!
விஞ்ஞான பொறியியல் பட்டதாரிகள் பட்டாளத்தை உருவாக்கி
முத்தான சாதனை படைத்த சுந்தரலிங்கம் மறப்பேனோ?
ஆசிரியர் எலியாசும் ஆசீர்வாதம் ஆசானும் பேரான
பஸ்தியாம்பிள்ளை சீரான துரைசிங்கம் பணி மறப்போமோ?
எழுபதுகள் வரை துறவிகள் நிர்வகித்த கல்லூரி - பின்
பொது மகனின் ஆட்சிக்கு வந்ததுவே
அதிபர் பதவியை அலங்கரித்தார் ரெட்னராஜா - அவர்
ஆளுமை, உறுதி, கம்பீரம் மிக்க அருந்தலைவர்!
வீறுநடை போட்டு முன்னேறி வருங்காலை
ஈனர் படடையெடுப்பால் காவலூர் நிலைகுலைந்து
மக்கள் இடம்பெயர அருமந்த கல்லூரி அவலமுற்றதையா
கண்ணீர் ஊற்றிவளர்த்த கலைக்கோயில் சிதைந்ததையா!
சத்தம் சந்தடி மனித நடமாட்டம் இல்லாத
மயான அமைதியிலே காவலூர் கருகியது
தொண்ணூறு முதல் தொண்ணூற்று ஆறுவரை
நானே இவ்விடத்தில் தனித்து தவித்து நின்றேன்!
அந்தோனியார் ஆலயமும் அருகிலிருந்த கல்லூரியும்
அவலத்தில் சிக்குண்டு ஆவினங்கள் புகலிடிமாய்
பாழடைந்து போனகதை யாரொடு சொல்லியழ?
பத்தாக்குறைக்கு என்னையும் வெட்டி வதைத்தனரே!
ஆறு ஆயர்களைத் தந்த கல்லூரி - பேரான
அறிஞர் பலரை உருவாக்கிய உயர் கல்லூரி
பிரதம நீதியரசர் சர்வானந்தா போன்றோர்
உருவாகத் துணை செய்த கல்லூரித் தாயிதுவே!
பன்மொழியும் பல்திறனும் படிப்பில் உச்சமும் கண்டு
பாரெங்கும் புகழ்பெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளும்
நாட்டின் மிகச் சிறந்த கல்விமானெனக் கண்டு மகிழ்ந்த
நம் பீற்றர்பிள்ளை அடிகளின் சாதனைகள் மாறப்போமோ?
நாட்டில் உயர் பதவிகளை நல்ல தொழில் தலைமைகளை
போற்றிடும் நற்பிரஜைகளை தோற்றுவித்த தாயிவளே
சான்றோர் பலரைத் தரணிக்குத் தந்த தரமான கல்லூரி
காவலூர் சிறப்புறவே வழிசமைத்த கலைக்கோயில்!
நூற்றாண்டு கண்ட வளமான கல்லூரி
சான்றாக நானின்றும் உள்ளேன் உயிரோடு
வேரோடு சாயவில்லை என்னருமைச் செல்வங்களே
பழைய மாணவரே இப்போது நானிருக்கும் நிலைப்பாரும்!
மீண்டும் துளிர்விட்டே வளம் பெற்றுய்த்திடுவேன்
ஆர்வமுடன் உழைத்த அடிகளார் இயேசுதாசனுடன்
இணைந்து கைகொடுத்து மீண்டும் எம் பெருமைதனை
மாநிலத்தில் நாட்டிப் புகழ் பரப்ப மனங்கொள்வீர் மக்காள்நீர்!
கல்லூரியின் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக்கிட அதிபர்
இரத்தினசிங்கம் அரும்பாடு பட்டு சாதனை நிலைநாட்டினார்
அருட்திரு அதிபர் ஜேசுதாசும் அடுத்து ஜேம்ஸ் சிங்கராயரும்
இன்றும் அரும்பணியாற்றி வருதல் போற்றுதற்க் குரியதன்றோ!
தொண்ணூற்றி ஏழாமாண்டு தனது நூற்றி இருபத்தைந்தாம்
ஆண்டினை அகமகிழ்ந்து கொண்டாட முடியாது அழுதாள்
ஆனாலின்று நூற்றி நாற்பதாமாண்டினை கனடாவிலும்
ஆனந்தமாய் கொண்டாடுகின்றனர் அவளது மாணவர்கள்!
நூற்று ஐம்பதை நாமெல்லாம் நம்ம ஊரில்
கண்டு மகிழ்ந்திட பார்வாழும் பழைய மாணவரே!
தவறாமல் வருவீர்! வந்து நம் கலைக்கூடம் காண்பீர்!
அதுவரை கல்லூரியின் காவலனாய் நானிருப்பேன் இது உறுதி!
வீரமுடன் போர் கண்ட நானின்று
வேரோடு வீழ்ந்து விடேன் வீதி விஸ்தரிப்பால்!
கல்லூரிப் பேர்கொண்ட காவலனே!
கலங்காமல் காத்திடுவாய் காவலூரின் கல்வித் தாயை!
எமன் போலக் குண்டினால் தகர்த்தானோ நானறியேன்
அவன் வைத்த குண்டுக்கு இரையாகிப் போயிருப்பேன்
கல்லூரிக் காவலனாய் இங்கே நான் இன்றுவரை நிற்பது அதிசயமே!
சன்னங்கள் பல வந்து என்னுடலைத் துழைத்திடினும்
நிலைகுலைந்து போகாது மரத்துப்போய் நிற்கின்றேன்
எத்திசை நோக்கிடினும் படையினரின் நடமாட்டம்
செய்வதறியாது தனியாக நின்று தவித்தேனே!
ஐயகோ! ஒரு நாள்:
இரவோடிரவாக எனது இடதுபுறக் கொப்பிரண்டை
படு பாதகமாய் வெட்டிச் சாய்த்தனரே
ஐயோ! என்று அலறினேனே என் செய்வேன்
வெட்டியவன் நல்லாய் இருப்பானோ, ஐயன்மீர்!
ஆறாத்துயரில் தேற்றுவாரின்றித் திகைத்தேனே
அந்தோ இன்னும் மாறவில்லை, இரண்டாண்டு கழியுமுன்னே
மீண்டும் அப்பாதகர்கள் வலக்கரத்தை வெட்டினரே
இரவில் நடந்த இந்தக் கோரத்தை யார் அறிவார்!
யாரிடம் நான் இத்துயரம் சொல்லி அழ
என் நிழலில் இளைப்பாறி மகிழ்ந்திட்ட
எனதருமைச் செல்வங்களே, பார் வாழும் பழைய மாணவரே!
எனதோலம் கேட்கிறதோ? உதவிட நீர் வருவீரோ?
கல்லூரிப் பெயர் தாங்கும் புனிதன் அந்தோனி
ஆலயத்தைக் கட்டுவித்த அருங்குரவர் தம்கையால்
நாட்டிவைத்த புளியமரம் நான் என்று சொல்லி
பெருமையுடன் இவ்விடத்தில் பல்லாண்டு வாழ்கின்றேன்
கல்லூரி கட்டுவித்த அருந்துறவி முதலாக
வந்த அதிபர்கள் எல்லோரும் என்னைப் போற்றி
நீரூற்றி வளர்த்து உருவாக்கி வளமாக வாழ வைத்தனர்
அன்று முதல் சடைத்துவளர்ந்து நிழல்பரப்பி நிக்கின்றேன்
புனித வளன் துறவியர்கள் அடியிட்ட்ட கல்லூரி
சைமன், சிறில், பேதுருப்பிள்ளையுடன்,
அலெக்ஸ் பிறதர் முதலானோர் மேன்மையுறச் செய்த
பேரான கல்லூரி என்பது நாடே அறிந்த உண்மை
அதிபர் திலகம் ஜோசப் அடிகளாரின்
பொற்காலம் மீண்டும் வருமோ?
காவலூர்க் கணிகலனாய்த் திக்கெட்டும்
வரலாற்றுப் பெருமை கண்ட அக்காலம் மறப்போமோ?
அன்பும், பண்பும் ஆளுமைத் திறனுக்கொண்ட
ஜோசப் அடிகள் ஒரு கடமை வீரனென்பர்
ஆற்றல் மிகு அவர்பணியால் ஆங்கிலக்கல்வி
அதீத வளம் பெற்று சிறப்பாய் வளர்ந்ததையா.
வளமான எதிர்காலம் வரும் என்று கனவு கண்டோம்
காலன் அவர் உயிரை கடிதிற்ப் பறித்தானே
ஊமை கண்ட கனவாக எல்லாமே சிதைந்ததுவே
என் செய்வோம் ஐயகோ நல்லார்க்கு காலமில்லை!
நீக்கிலாப் பிள்ளையொடு கருணாகரன் அடிகள் மற்றும்
ஜீவரெட்டினமும் அன்னாரை அடியொற்றி
கல்வியோடு விளையாட்டில் வெற்றி நடைபோட்ட
ஸ்ரனிஸ்லோஸ் அடிகளாரின் சேவை மறப்போமோ!
அல்பிரட் அடிகளாரும் மௌனமாய் வழிநடத்தும்
மரியாம்பிள்ளை அடிகளாரும் பண்பாளன்
சூசைப்பிள்ளை சுவாமியாரும் ஆண்டுயர்ந்த கல்லூரி
துறவிகள் பணிசெய்த ஏற்றமிகு காலம் ஐயா.
பாடசாலை முடிந்தவுடன் பஸ்சிற்கு காத்திருக்கும்
மாணவரும் ஆசிரியர் பெற்றோரும் செய்யும்
அரட்டைகளால் என்செவியே செவிடுபடும் - அருகே
கச்சான் விற்கும் பொன்னுக்கு கிளவிக்கும் நல்ல வியாபாரம்.
பள்ளிக்கு கள்ளம்போட்டு என்முதுகில் ஒளித்திருக்கும்
கள்ளச் சிறுவர்க்கு அடைக்கலமாய் நின்றிருப்பேன்
மதிய இடைவேளை ஆலயத்துக் கணியணியாய்
செல்லும் இளசுகளைக் கண்டு மனம் பூரித்திருப்பேன்!
கரம்பொனில் இருந்துவரும் ஜோர்ச் மாஸ்டர் என்றால்
திறம்பட ஆங்கிலத்தை கற்பித்த ஆசானென்பர்
கொச்சியில் இருந்து வந்த பொன்சேகா மாஸ்டர் ஒரு
விஞ்ஞானப் பேராசான் விளையாட்டுத்துறையிலும் மேதை.
அன்னாரின் சேவையிலே கல்லூரி உயர்ந்ததென்பேன்
நீக்கிலாப்பிள்ளை மாஸ்டரை நினைத்தாலே குலை நடுங்கும்
அவர் வரவே கூடாதென நேர்ந்திருப்பார் பலருண்டு
வில்லுக்கு விஜயன் போல் பிரம்படிக்கு மரியநாயகம்.
என் நிழலில் காத்திருந்து பிந்தி வரும் மாணவரை
வசமாகப் பிடித்து வைத்து பிரம்பாலே அடிப்பார் நன்றாய்
ஆறு அடிபட்டால் அடுத்தநாள் பிந்துவரோ
சிறுவர் திட்டுமொலி என்காதில் எதிரொலிக்கும்.
கணிதம் கற்ப்பிக்கும் விக்டர்பிலிப் மாஸ்டருடன்
ஆங்கில ஆசான் பிலிப்புப்பிள்ளை உயர் வகுப்புகளை
ஊக்கமுடன் வளர்த்தெடுத்தனர் உண்மை இது
நடித்து நயமாகக் கற்ப்பிக்கும் அலோய் மாஸ்டர் என அறிவேன்.
புவியியல் ஆசிரியர் நடராசா இந்தக் கல்லூரிக்கு
மறு வாழ்வளித்த வள்ளல் என்பேன்
குண்டடிபட்டு சிதைந்தழிந்த கல்லூரி மீண்டும் சீரமைப்புற்று
எழுந்து நிற்பதிந்த கனவானின் தயவாலே!
முன்பிருந்த சவரிமுத்து, அருளானந்தம், B .M .
என அன்புடன் அனைவரும் அழைத்த திட்ட
மனுவேற்பிள்ளை மாஸ்டராருடன் மற்றும்
ஜெராட் மாஸ்டர், நடராசா இவர்கள் இன்றில்லை.
Boxing நடராசா! ஆம் மாணவர்கள் என் நிழலில்
பட்டப்பேர் சொல்லிப் பலரை அழைப்பதை நான் கேட்பேன்
வாயிருந்தால் கண்டித்திருப்பேன் என் செய்வேன்
மனதில் குமைந்து மௌனமாக அழுத்திட்டேன்.
ஆசிரியர் சபாரெட்னம் அவரொரு கலைப் பொக்கிஷம்
நடமாடும் பல்கலைக் கழகம் என்றால் அது தகுமே
இலக்கிய பாடத்தை நயம்படக் கற்பித்து
மாணவர் கவனத்தை ஈர்த்துவிடும் பேராசான்!
அடக்கமும் அறிவும் கொண்ட ஒரு மேதை - இன்னும்
ஆர்வமுடன் எழுதிவரும் எழுத்துலகச் சிற்பி
இத்துணை ஆற்றல் பெற்ற ஆசான்களின் சேவையினால்
வளம் பெற்று உயர்ந்திட்ட கலைக் கூடம் நமது!
விஞ்ஞான பொறியியல் பட்டதாரிகள் பட்டாளத்தை உருவாக்கி
முத்தான சாதனை படைத்த சுந்தரலிங்கம் மறப்பேனோ?
ஆசிரியர் எலியாசும் ஆசீர்வாதம் ஆசானும் பேரான
பஸ்தியாம்பிள்ளை சீரான துரைசிங்கம் பணி மறப்போமோ?
எழுபதுகள் வரை துறவிகள் நிர்வகித்த கல்லூரி - பின்
பொது மகனின் ஆட்சிக்கு வந்ததுவே
அதிபர் பதவியை அலங்கரித்தார் ரெட்னராஜா - அவர்
ஆளுமை, உறுதி, கம்பீரம் மிக்க அருந்தலைவர்!
வீறுநடை போட்டு முன்னேறி வருங்காலை
ஈனர் படடையெடுப்பால் காவலூர் நிலைகுலைந்து
மக்கள் இடம்பெயர அருமந்த கல்லூரி அவலமுற்றதையா
கண்ணீர் ஊற்றிவளர்த்த கலைக்கோயில் சிதைந்ததையா!
சத்தம் சந்தடி மனித நடமாட்டம் இல்லாத
மயான அமைதியிலே காவலூர் கருகியது
தொண்ணூறு முதல் தொண்ணூற்று ஆறுவரை
நானே இவ்விடத்தில் தனித்து தவித்து நின்றேன்!
அந்தோனியார் ஆலயமும் அருகிலிருந்த கல்லூரியும்
அவலத்தில் சிக்குண்டு ஆவினங்கள் புகலிடிமாய்
பாழடைந்து போனகதை யாரொடு சொல்லியழ?
பத்தாக்குறைக்கு என்னையும் வெட்டி வதைத்தனரே!
ஆறு ஆயர்களைத் தந்த கல்லூரி - பேரான
அறிஞர் பலரை உருவாக்கிய உயர் கல்லூரி
பிரதம நீதியரசர் சர்வானந்தா போன்றோர்
உருவாகத் துணை செய்த கல்லூரித் தாயிதுவே!
பன்மொழியும் பல்திறனும் படிப்பில் உச்சமும் கண்டு
பாரெங்கும் புகழ்பெற்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளும்
நாட்டின் மிகச் சிறந்த கல்விமானெனக் கண்டு மகிழ்ந்த
நம் பீற்றர்பிள்ளை அடிகளின் சாதனைகள் மாறப்போமோ?
நாட்டில் உயர் பதவிகளை நல்ல தொழில் தலைமைகளை
போற்றிடும் நற்பிரஜைகளை தோற்றுவித்த தாயிவளே
சான்றோர் பலரைத் தரணிக்குத் தந்த தரமான கல்லூரி
காவலூர் சிறப்புறவே வழிசமைத்த கலைக்கோயில்!
நூற்றாண்டு கண்ட வளமான கல்லூரி
சான்றாக நானின்றும் உள்ளேன் உயிரோடு
வேரோடு சாயவில்லை என்னருமைச் செல்வங்களே
பழைய மாணவரே இப்போது நானிருக்கும் நிலைப்பாரும்!
மீண்டும் துளிர்விட்டே வளம் பெற்றுய்த்திடுவேன்
ஆர்வமுடன் உழைத்த அடிகளார் இயேசுதாசனுடன்
இணைந்து கைகொடுத்து மீண்டும் எம் பெருமைதனை
மாநிலத்தில் நாட்டிப் புகழ் பரப்ப மனங்கொள்வீர் மக்காள்நீர்!
கல்லூரியின் கண்ணீரை ஆனந்தக் கண்ணீராக்கிட அதிபர்
இரத்தினசிங்கம் அரும்பாடு பட்டு சாதனை நிலைநாட்டினார்
அருட்திரு அதிபர் ஜேசுதாசும் அடுத்து ஜேம்ஸ் சிங்கராயரும்
இன்றும் அரும்பணியாற்றி வருதல் போற்றுதற்க் குரியதன்றோ!
தொண்ணூற்றி ஏழாமாண்டு தனது நூற்றி இருபத்தைந்தாம்
ஆண்டினை அகமகிழ்ந்து கொண்டாட முடியாது அழுதாள்
ஆனாலின்று நூற்றி நாற்பதாமாண்டினை கனடாவிலும்
ஆனந்தமாய் கொண்டாடுகின்றனர் அவளது மாணவர்கள்!
நூற்று ஐம்பதை நாமெல்லாம் நம்ம ஊரில்
கண்டு மகிழ்ந்திட பார்வாழும் பழைய மாணவரே!
தவறாமல் வருவீர்! வந்து நம் கலைக்கூடம் காண்பீர்!
அதுவரை கல்லூரியின் காவலனாய் நானிருப்பேன் இது உறுதி!
வீரமுடன் போர் கண்ட நானின்று
வேரோடு வீழ்ந்து விடேன் வீதி விஸ்தரிப்பால்!
கல்லூரிப் பேர்கொண்ட காவலனே!
கலங்காமல் காத்திடுவாய் காவலூரின் கல்வித் தாயை!
உருவாக்கம்: எஸ். மங்களநாயகம்
எஸ்.எம். ஜோசெப்
எஸ்.எம். ஜோசெப்
Paathukaavalan - 23.1058
Paathukaavalan - 2 December 1955
Paathukaavalan - 13 October 1955
Paathukaavalan - 18 August 1955
Paathukaavalan - 23 July 1955
Paathukaavalan - 14 April 1955
Paathukaavalan - 9 December 1954
Paathukaavalan - 14 October 1954
Paathukaavalan - 30 September 1954
Published in the "Paathukaavalan" of 24 June 1954
Published in the "Paathukaavalan" of 17 June 1954
Published in the "Paathukaavalan" of 27 May 1954
Published in the "Paathukaavalan" of 06 May 1954
Paathukaavalan - 31 March 1954
Published in the "Paathukaavalan" 0f 18 March 1954
Published in the "Paathukaavalan" of 25 February 1954
Published in the "Paathukaavalan" of 18 February 1954
Published on the "Paathukaavalan" of 28 January 1954
Published on the "Paathukaavalan" of 21 January 1954
Published on the "Paathukavalan" of 21 January 1954
Published in the "Paathukaavalan" of 10 December 1953
Published in the "Paathukaavalan" of 26 November 1953
Published in the "Paathukaavalan" of 19 November 1953.
Published in the "Paathukaavalan" of 12 November 1953
Published in the "Paathukaavalan" of 05 November 1953
Published in the Paathukaavalan of 27 August 1953
Paathukaavalan - 16 July 1953
Paathukaavalan - 18 July 1953
Paathukaavalan - 11 June 1953
Paathukaavalan - 14 May 1953
Published in the "Paathukaavalan" of 27 March 1952
Published on the "Paathukaavalan" of 31 January 1952
Published in the "Paathukaavalan" of 10 April 1951