The Parish Priests of Kayts!
Parish Priest's Residence!
Linus Aloysius U.K - 25 August 2021
I was joyous and surprised to see the Parish Priests renovated residence! I take this opportunity to congratulate the members of the East Street Community who donated money for the restoration of the building! As an altar boy, I was familiar with the residence! In 1982, when I visited Kayts, that building was in good shape! Since our church and the building were near the seacoast, the church and the adjoining building were very badly damaged! Now the church is restored and, the Parish Priests residence is also restored far beyond my expectations!
In my time, the Parish Priest's residence had only basic amenities but now it has become a luxurious residence for the priests to live in the building with electricity and pipe water supply! The further renovated hall can be used for functions!
This residence of the priests was built in 1912 when a European Priest Rev. Fr. Owen William was the parish priest of Kayts. For many years the rectors of St. Anthony’s College lived in this residence! I can remember Fathers A.S Joseph, Aruelnson and, Karunakarar! Especially Fr Joseph was very closely attached to our community! He was friendly with my mother and used to talk to my mother freely! Also friendly with my Godmother as she used to do some cooking for him! He had a great admiration for our boys! I joined the college a few months before his departure from us! He had an operation and, that was his end of life! He was, of course, a disciplinarian with high principles, and all the students were frightened him! In the evenings,/'he used to walk along the coastal area while praying! After his departure, Fr William Jesudasan was a temporary rector! He used to wear his cassocks and they were too big for him! He also found quite a lot of coins in his table drawers! Fr Joseph led a good life and, he was educated in England as well! He used to sign letters and, below his signature, he used to write BA London! Because he was proud to exhibit himself as he was educated, in England!
Our parish residence is a historical house as few European bishops when they were priests, they stayed in our parish house! All the European Bishops celebrated the Holy Mass in our church. The last European Bishop was Guyomor. I can remember him. He who consecrated the first Tamil bishop Emmilianuspillai. I was at the ceremony with Vincent and his mother in Jaffna. All our Tamil bishops had their early education at St. Anthony's College. Therefore, they are familiar with our parish church!
Our church is located in a prominent area near St. Anthony's College also at the entrance to the village! Most of our houses are in dilapidated and ruined conditions! Jaffna has become an overcrowded city! I believe that the road from Jaffna to Kayts is well maintained further the bus travel from Jaffna to Kayts takes only 20 minutes! Because of the overcrowded Jaffna, many may want to move to Kayts! If our community can renovate the houses and can be rented! Therefore, I request our East Street Community to renovate the houses.
Finally, I congratulate all the members of our community who live at home and abroad who contributed money to repair and renovate the church and the parish priest's residence! Let us thank St Anthony as well for his blessings! He is the most miracles saint in Christendom! We are blessed to have him as our Community Saint! He is such a popular Saint. We can find his statue at the entrance of the churches all over the world!
I humbly request all our East Street to unite to build a united community!
Let us remember the axiom "United we stand and divided we fall!"
Here I quote! Martin Luther King!
"If we cannot live as human beings, we will perish as fools!”
In my time, the Parish Priest's residence had only basic amenities but now it has become a luxurious residence for the priests to live in the building with electricity and pipe water supply! The further renovated hall can be used for functions!
This residence of the priests was built in 1912 when a European Priest Rev. Fr. Owen William was the parish priest of Kayts. For many years the rectors of St. Anthony’s College lived in this residence! I can remember Fathers A.S Joseph, Aruelnson and, Karunakarar! Especially Fr Joseph was very closely attached to our community! He was friendly with my mother and used to talk to my mother freely! Also friendly with my Godmother as she used to do some cooking for him! He had a great admiration for our boys! I joined the college a few months before his departure from us! He had an operation and, that was his end of life! He was, of course, a disciplinarian with high principles, and all the students were frightened him! In the evenings,/'he used to walk along the coastal area while praying! After his departure, Fr William Jesudasan was a temporary rector! He used to wear his cassocks and they were too big for him! He also found quite a lot of coins in his table drawers! Fr Joseph led a good life and, he was educated in England as well! He used to sign letters and, below his signature, he used to write BA London! Because he was proud to exhibit himself as he was educated, in England!
Our parish residence is a historical house as few European bishops when they were priests, they stayed in our parish house! All the European Bishops celebrated the Holy Mass in our church. The last European Bishop was Guyomor. I can remember him. He who consecrated the first Tamil bishop Emmilianuspillai. I was at the ceremony with Vincent and his mother in Jaffna. All our Tamil bishops had their early education at St. Anthony's College. Therefore, they are familiar with our parish church!
Our church is located in a prominent area near St. Anthony's College also at the entrance to the village! Most of our houses are in dilapidated and ruined conditions! Jaffna has become an overcrowded city! I believe that the road from Jaffna to Kayts is well maintained further the bus travel from Jaffna to Kayts takes only 20 minutes! Because of the overcrowded Jaffna, many may want to move to Kayts! If our community can renovate the houses and can be rented! Therefore, I request our East Street Community to renovate the houses.
Finally, I congratulate all the members of our community who live at home and abroad who contributed money to repair and renovate the church and the parish priest's residence! Let us thank St Anthony as well for his blessings! He is the most miracles saint in Christendom! We are blessed to have him as our Community Saint! He is such a popular Saint. We can find his statue at the entrance of the churches all over the world!
I humbly request all our East Street to unite to build a united community!
Let us remember the axiom "United we stand and divided we fall!"
Here I quote! Martin Luther King!
"If we cannot live as human beings, we will perish as fools!”
தனிநாயகம் அடிகள்!
தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் தந்தை நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு, சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தார். அடிகளாரது தந்தை நாகநாதன், மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார்.
தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.
தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும்.
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். இவர் தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.
இடைக்காலம், நவீன காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்ற தென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அர்ரய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு தமிழ் மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும். தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்!
தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார். இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.
குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.
1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.
1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டில் Tamil Culture (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது. இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக "Journal of Tamil Studies" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார்.
தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு சப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக 1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) "காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.
தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது (1952) என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகாளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு "தமிழ்த் தூது" என்பதாகும். இது 1952 ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் "ஒரே உலகம்" என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற மகுடமிடப்பெற்று 1967ல் நூலாக வெளிவந்தது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.
இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.
The Carthaginian Clergy
Nature in the ancient poetry
Aspects of Tamil Humanism
Indian thought and Roman Stoicism
Educational thoughts in ancient Tamil literature
தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.
தமிழ்த்தூது
ஒரே உலகம்
திருவள்ளுவர்
உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.
Reference guide to Tamil studies
Tamil Studies Abroad
Tamil Culture and Civilization
இவரால் எழுதப்[பட்ட நூல்கள் ஆகும்.
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்துஎன்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது
நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது.
அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் நமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை.
தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது. இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடும் பாடல் திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை உலகுக்கு அறிவித்தார். 1954-ம் ஆண்டு தாய்லாந்து சென்ற போது அங்கு பாடப்பட்ட பாடல் இது.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாந்தடய்கண்
மாதே வளருதியோ வன்சேவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதியாய்க் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்மறந்து…”
இப்பாடல்களை அடிகளார்க்குப் படித்துக் காட்டிய தாய்லாந்து நாட்டு அரச குரு தாய்லாந்து மொழியிலும் கிரந்தந்திலும் எழுதப்பட்டிருந்த சில ஏடுகளையும் காட்டினார். தாய்லாந்தில் பின்பற்றப்பட்ட இந்து சமயமும், புத்த சமயமும் இந்தியாவிலிருந்து சென்றவைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாய்லாந்து நாட்டிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பினை முதன் முதலில் அறிந்து தெரிவித்தவர் தனிநாயகம் அடிகளாரே ஆவார்.
மலாயாவையும் தாய்லாந்தையும் இணைக்கும் நீண்ட குறுகிய இடப்பரப்பில் அமைந்துள்ள ‘தாக்குவப்பா’ என்னும் இடமே சிலப்பதிகாரம் காட்டும் ‘தக்கோலம்’ என்பது அடிகளாரின் கண்டுபிடிப்பு. மேலும் அம்மாவட்டத்தில் மணிக் கிராமத்தார் பற்றிய கல்வெட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதும், அங்குள்ள இடப்பெயர்களும் சிவபெருமானின் பழைய சிலையும் தமிழ் கலைத் தொடர்பைக் காட்டுவதும் அடிகளாரின் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
தமிழ்பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பிய அடிகளார்…
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே”
என்னும் திருமூலரின் வரிகளைச் சொல்லி தம் உரையை முடிப்பார் அடிகளார் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் முதல் அமர்வுக்கு அவர் தலைமை தாங்கிய போது மேற்கூறிய வரிகளைக் கூறிய பின்னரே ஆங்கிலத்தில் தம் உரையைத் தொடர்ந்தார்.
இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் முதன்மை விருந்தினராக தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது.
1970 ஆம் ஆண்டு ஜீலை 15-18 தேதிகளில் பிரான்சு நாட்டு தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டு ஜனவரி 3 – 9 தேதிகளில் யாழ்பாணத்தில் நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அவ்வரங்குகளில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
திருவள்ளுவரை கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோருடன் ஒப்பிட்டுக்காட்டி வள்ளுவம் மேற்கத்திய தத்துவங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்பதை சான்றுகள் மூலம் விளக்கினார். சமஸ்கிருதம், பாலி மொழி இலக்கியங்கள் பெரும்பாலும் சமயப்பின்னணியில் எழுஅடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.தப்பட்டவைகளே. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே சமய சார்பற்று தனித்து விளங்கியதையும், இதன் மூலமாகவே தமிழ் இலக்கியம் வேறு எந்த மொழிக்கும் கடன்பட்டதில்லை என்பதையும் இந்த உலகிற்கு ஆய்வுகள் மூலம் விளக்கினார்.
தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது அவை ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டால் தான் உலக அரங்கினைச் சென்றடைய முடியும் என்பதால் தமிழாய்வுக்காக ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது அவசியம் என்பதைஅன்றே உணர்ந்தவர் . அவரின் பன்னிரெண்டாவது வயதில் அவரின் தாயார் இறந்தார். அதன் பின்னர் அவர் தான் ஒரு குருவானவராக வரவேண்டும் என எண்ணினார். இதற்குக் காரணம் தோல்ஸ்டோய் என்பவரின் உயிர்ப்பு என்ற நாவல் தன்னுடைய உள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கம் தான் காரணம் என்று தெரிவித்தார். அந்த வாக்கியம் “ஒரேயொரு முறை தான் இவ்வுலகில் நான் பயணிப்பேன். இக்காலத்தில் ஏதாவதொரு நற்செயலை என்னால் செய்ய முடியும் என்றால், இன்னொரு உயிருக்கு என்னால் அன்பு காட்ட முடியும் என்றால், அதை நான் இப்போதே செய்யப் போகிறேன். ஏனென்றால், மீண்டும் ஒரு தடவை இவ்வுலகில் நான் கால் பதிக்க மாட்டேன்” என்பதே அந்த வாக்கியம்.
1931ஆம் ஆண்டு தனது குருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்காக கொழும்பிலுள்ள பேணாட் குருமடத்திற்குச் சென்றார். அங்கே மெய்யியலைக் கற்றதுடன், உயிரோட்டமுள்ள ஓர் எழுத்தாளனாகவும் திகழ்ந்தார். உரோமாபுரிக்குச் சென்று இறையியல் கல்வியைத் தொடர அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதேவேளை, அவரை ஆதரித்த கியோமர் ஆண்டகை அவரை தொடர்ந்து ஆதரிக்க மறுத்து விட்டார். இந்த வேளையில் அவருக்கு ஆதரவு தெரிவித்தவரகள் யாழ். சென் பத்திரிசியார் கல்லூரி அதிபர் சாள்ஸ் மத்தியுஸ் அடிகளார் மற்றும் சாள்ஸ் லோங் அடிகளார் ஆவர். இவர்களின் ஆதரவுடன் கேரளாவில் உள்ள சீரோ மலங்கார் ஆயரான மேதகு மார் இவானியூஸ் ஆண்டகை அவர்கள் சேவியர் அவர்களை உரோமாபுரிக்கு அனுப்பி வைத்தார்.
1934ஆம் ஆண்டு 21 வயதான சேவியர், தனது இறையியல் கல்வியை தொடர்வதற்காக கடல் வழியாக உரோமாபுரிக்கு பயணமானார். 1938 மார்ச் 19ஆம் திகதி உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இக்காலகட்டத்திலேயே தமிழ் மொழி மீதான ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. அங்கே வீரமாமுனிவர் கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அத்துடன் வத்திக்கான் வானொலியிலும் தமிழ் மொழி பிரிவில் பணியாற்றினார். 1939ஆம் ஆண்டு ரோமில் தனது இறையியற் கல்லூரியை நிறைவு செய்த சேவியர் தன்னை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்த இவானியூஸ் ஆண்டகையின் மறைமாவட்டத்திலே பணியாற்றுவதற்காக கேரளா, திருவனந்தபுரம் சென்றார். அங்கு பணியாற்றுவது அவருக்கு ஒத்துவரவில்லை. இதனால் தனிநாயம் அடிகளார் இவானியூஸ் ஆண்டகையின் அனுமதியில்லாமலே உரோமாபுரிக்கு மீண்டும் செல்வதற்குத் தீர்மானித்தார். பின்னர் மேதகு திபூஸியஸ் ஆண்டகை அவர்களின் மறைமாவட்டமான தூத்துக்குடியில் சேவியர் அவர்கள் தனது குருத்துவப் பணியைத் தொடர உரோமாபுரியிலுள்ள அவரது பேராசிரியர் அவருக்கு வழிசமைத்துக் கொடுத்தனர்.
1941ஆம் ஆண்டு சேவியர் அவர்கள் தனக்கு தமிழ்ப் பெயரை சூட்டுவதற்கு விரும்பி தனது தந்தையுடன் கலந்தாலோசித்து தந்தை வழி மூதாதையாரான தனிநாயகம் என்ற பெயரை சூட்டிக் கொண்டார்.
https://youtu.be/D8vaDes4pQ8 இது 1968ம் ஆண்டு தமிழாராச்சி மாநாடு நடந்த வீடியோ
மறக்காமல் பார்த்து மகிழுங்கள்.
இப்படியாக தமிழால் தமிழ் வளர்த்த அடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
Manikkavasagar Vaitialingam
தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைஷ்ணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.
தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும்.
சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். இவர் தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.
இடைக்காலம், நவீன காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்ற தென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அர்ரய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார். அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு தமிழ் மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும். தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்!
தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம், இலத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், எசுப்பானியம், போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று The Carthaginian Clergy என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில் (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார். இவ்வாய்வுக் கட்டுரை 1960இல் நூல் வடிவில் வெளியானது. இங்கு படிக்கும்போதே இவருக்கு பன்நாட்டு அறிஞர்களின் தொடர்புகள் கிடைத்தது.
குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். முறையான தமிழைக் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இங்கேயே தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.
1945ஆம் ஆண்டு தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பிற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். இவரது தமிழ் அறிவின் ஆழத்தினையும் முதிர்ச்சியினையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரத்தினசாமி, மற்றும் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரும் எடுத்த முடிவினால் இளமாணிப் படிப்பு முடிக்காமலே நேரடியாக முதுகலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார். அங்கு சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுகலைக் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1947 தொடக்கம் 1949 வரை தமிழ் இலக்கிலயத்தில் சங்ககால இலக்கியச் செய்யுளில் இயற்கை என்னும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, எம்.லிட். பட்டத்தையும் பெற்றுக் கொண்டார். செய்த முதல் தமிழ் ஆய்வே இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.
1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தூத்துக்குடியில் பணியாற்றிய காலத்தில் தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியக் கழகம் என்ற அமைப்பினை நிறுவி 1952 ஆம் ஆண்டில் Tamil Culture (தமிழ்க் கலாச்சாரம்) என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்றடைந்தது. இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களான சுவெலபில், பிளியோசற், அந்திரோனொவ், எமனு, குய்ப்பர், நோல்டென், மார், பொக்சர், பறோ ஆகியோர் இவ்விதழில் தொடர்ந்து தமது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர். 1961 இல் சென்னையில் "தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்" (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். முதல் தமிழாராச்சி மகாநாட்டினைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக "Journal of Tamil Studies" என்னும் ஒரு இதழுக்கான ஆசிரியராக சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரைகளை வெளிக் கொணர்ந்தார்.
தமிழ் மொழியையும் அதன் இலக்கியச் செழுமையையும் உலகில் பரப்பும் நோக்கோடு சப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்குவடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஓர் ஆண்டிலேயே இருநூறிற்கும் மேற்பட்ட பேருரைகளை நிகழ்த்தி சாதனை புரிந்தார். இவ்வாறு விரிவுரைகளை நிகழ்த்தும் போது பல நாடுகளிலும் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடமும் நடத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தபோது அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்தார். இதன் பெறுபேறாக 1556 ஆம் ஆண்டில் தமிழில் அச்சிடப்பெற்ற Luso-Tamil Catechism (போர்த்துக்கீச-தமிழ் மொழியில் கிறித்தவம் சார்ந்த கேள்விக் கொத்து) "காட்டில்கா" (Cartilha) எனப் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அடிகளார் 1950 ஆம் ஆண்டில் லிஸ்பனில் கண்டெடுத்தார். அத்துடன், 1578 இல் அச்சிடப்பெற்ற தம்பிரான் வணக்கம் (Thambiran Vanakkam), 1579 இல் வெளியிடப்பட்ட "கிறித்தியானி வணக்கம்" (Kiristiani Vanakkam). முதன் முதலாக அன்ரம் டீ பெறோனீக்கா என்பவரால் தொகுக்கப்பட்ட தமிழ் - போர்த்துக்கீச மொழி அகராதி போன்றவற்றையும் கண்டெடுத்தார். அதில் பெறொனிக்கா அகராதியினை மீள்பதிப்பு செய்து அதனை முதல் தமிழாராச்சி மகாநாட்டில் மலேசியாவில் வெளியிட்டார்.
தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மகாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தியது. அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். 1961 ஆண்டில் அவர் மலாய் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகவும் தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றியது மிகவும் துணைநின்றது. அப்போது அமைச்சர்களாக இருந்த வி. தி. சம்பந்தன், வி. மாணிக்கவாசகம் ஆகியோருடன் அடிகளார் பேணிய நல்லுறவால் மலேசிய அரசின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது. மாநாட்டிற்கு மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டு முதலமைச்சர் எம். பக்தவத்சலமும் கலந்து சிறப்பித்தார். புரொயென்காவின் போர்த்துக்கீச-தமிழ் அகராதியை அங்கு மீள்பதிவாக்கம் செய்து இம்மாநாட்டில் தனிநாயகம் அடிகளார் வெளியிட்டார் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது (1952) என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார். அடிகாளார் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு "தமிழ்த் தூது" என்பதாகும். இது 1952 ல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பயணங்களின் அனுபவங்கள் "ஒரே உலகம்" என்ற தலைப்பில் 1963ஆம் ஆண்டு வெளியிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர்ச் சொற்பொழிவு “திருவள்ளுவர்” என்ற மகுடமிடப்பெற்று 1967ல் நூலாக வெளிவந்தது. அடிகளார் எழுதிய 30 ஆய்வுக்கட்டுரைகள் தமிழ் காலாசரம் சஞ்சிகையில் வெளிவந்த 70 கட்டுரைகள் பலவேறு இதழ்களிலும் கருத்தரங்க மலர்களிலும் வெளிவந்துள்ளன.
இலங்கையிலிருந்து வெளியான சைமன் காசிச்செட்டி ஆங்கிலத்தில் எழுதிய தமிழ் புளூட்டார்க் என்ற நூலை பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரைக் கொண்டு கூடுதல் செய்திகளைச் சேர்த்து பிழை களைந்து வெளியிட ஏற்பாடு செய்தார்.
The Carthaginian Clergy
Nature in the ancient poetry
Aspects of Tamil Humanism
Indian thought and Roman Stoicism
Educational thoughts in ancient Tamil literature
தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.
தமிழ்த்தூது
ஒரே உலகம்
திருவள்ளுவர்
உலக ஒழுக்கவியலில் திருக்குறள்.
Reference guide to Tamil studies
Tamil Studies Abroad
Tamil Culture and Civilization
இவரால் எழுதப்[பட்ட நூல்கள் ஆகும்.
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்துஎன்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவரது சிலை ஒன்றும் தமிழகக் கல்வியமைச்சர் அரங்கநாயகம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவரின் இறப்புக்குப் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது
நெடுந்தீவு மக்கள் தமது மண்ணின் மைந்தனாகிய தனிநாயகம் அடிகளுக்கு ஆளுயர சிலை அமைத்துள்ளனர். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனிநாயக அடிகளின் தமிழ்ச் சேவையினை நினைவு கூர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது அவருக்கு இறப்புக்குப் பின்னரான கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. சென்னையில் 2013 பெப்ரவரி 16 அன்று தனிநாயக அடிகளாரின் நினைவை போற்றும் வகையில் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது.
அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் நமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை.
தனிநாயகம் அடிகளார் போர்த்துகலில் கண்டறிந்த Arte da Lingua Malabar என்ற கையேடே தமிழுக்காக அயலவர் எழுதிய முதல் இலக்கணக் கையேடு ஆகும். தாளில் எழுதப்பட்ட இந்தக் கையேடு என்றீக்கு அடிகளால் 1549-இல் வழங்கிய போர்த்துக்கீசிய மொழியில் அக்காலத்துத் தமிழ் மொழியை விளக்குகிறது. இந்தக் கையேட்டை ஜீன் ஹைன் (Jeanne Hein) என்ற அமெரிக்கர் 2013 ஏப்ரலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடும் பாடல் திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதை உலகுக்கு அறிவித்தார். 1954-ம் ஆண்டு தாய்லாந்து சென்ற போது அங்கு பாடப்பட்ட பாடல் இது.
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாந்தடய்கண்
மாதே வளருதியோ வன்சேவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதியாய்க் கேட்டாலுமே விம்மி விம்மி மெய்மறந்து…”
இப்பாடல்களை அடிகளார்க்குப் படித்துக் காட்டிய தாய்லாந்து நாட்டு அரச குரு தாய்லாந்து மொழியிலும் கிரந்தந்திலும் எழுதப்பட்டிருந்த சில ஏடுகளையும் காட்டினார். தாய்லாந்தில் பின்பற்றப்பட்ட இந்து சமயமும், புத்த சமயமும் இந்தியாவிலிருந்து சென்றவைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாய்லாந்து நாட்டிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பினை முதன் முதலில் அறிந்து தெரிவித்தவர் தனிநாயகம் அடிகளாரே ஆவார்.
மலாயாவையும் தாய்லாந்தையும் இணைக்கும் நீண்ட குறுகிய இடப்பரப்பில் அமைந்துள்ள ‘தாக்குவப்பா’ என்னும் இடமே சிலப்பதிகாரம் காட்டும் ‘தக்கோலம்’ என்பது அடிகளாரின் கண்டுபிடிப்பு. மேலும் அம்மாவட்டத்தில் மணிக் கிராமத்தார் பற்றிய கல்வெட்டொன்று கண்டுபிடிக்கப்பட்டதும், அங்குள்ள இடப்பெயர்களும் சிவபெருமானின் பழைய சிலையும் தமிழ் கலைத் தொடர்பைக் காட்டுவதும் அடிகளாரின் கருத்துக்கு வலு சேர்க்கின்றன.
தமிழ்பணி செய்யவே இறைவன் தன்னை அழைக்கின்றான் என்று உறுதியாக நம்பிய அடிகளார்…
“என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே”
என்னும் திருமூலரின் வரிகளைச் சொல்லி தம் உரையை முடிப்பார் அடிகளார் முதல் உலகத் தமிழ் மாநாட்டின் முதல் அமர்வுக்கு அவர் தலைமை தாங்கிய போது மேற்கூறிய வரிகளைக் கூறிய பின்னரே ஆங்கிலத்தில் தம் உரையைத் தொடர்ந்தார்.
இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் முதன்மை விருந்தினராக தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது.
1970 ஆம் ஆண்டு ஜீலை 15-18 தேதிகளில் பிரான்சு நாட்டு தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டு ஜனவரி 3 – 9 தேதிகளில் யாழ்பாணத்தில் நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. அவ்வரங்குகளில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
திருவள்ளுவரை கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோருடன் ஒப்பிட்டுக்காட்டி வள்ளுவம் மேற்கத்திய தத்துவங்களைக் காட்டிலும் மேலோங்கி நிற்பதை சான்றுகள் மூலம் விளக்கினார். சமஸ்கிருதம், பாலி மொழி இலக்கியங்கள் பெரும்பாலும் சமயப்பின்னணியில் எழுஅடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.தப்பட்டவைகளே. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே சமய சார்பற்று தனித்து விளங்கியதையும், இதன் மூலமாகவே தமிழ் இலக்கியம் வேறு எந்த மொழிக்கும் கடன்பட்டதில்லை என்பதையும் இந்த உலகிற்கு ஆய்வுகள் மூலம் விளக்கினார்.
தமிழாய்வுக் கட்டுரைகளைத் தமிழில் மட்டும் படைத்தால் போதாது அவை ஆங்கிலத்திலும் வடிக்கப்பட்டால் தான் உலக அரங்கினைச் சென்றடைய முடியும் என்பதால் தமிழாய்வுக்காக ஆங்கில இதழ் ஒன்று வெளியிடப்படுவது அவசியம் என்பதைஅன்றே உணர்ந்தவர் . அவரின் பன்னிரெண்டாவது வயதில் அவரின் தாயார் இறந்தார். அதன் பின்னர் அவர் தான் ஒரு குருவானவராக வரவேண்டும் என எண்ணினார். இதற்குக் காரணம் தோல்ஸ்டோய் என்பவரின் உயிர்ப்பு என்ற நாவல் தன்னுடைய உள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கம் தான் காரணம் என்று தெரிவித்தார். அந்த வாக்கியம் “ஒரேயொரு முறை தான் இவ்வுலகில் நான் பயணிப்பேன். இக்காலத்தில் ஏதாவதொரு நற்செயலை என்னால் செய்ய முடியும் என்றால், இன்னொரு உயிருக்கு என்னால் அன்பு காட்ட முடியும் என்றால், அதை நான் இப்போதே செய்யப் போகிறேன். ஏனென்றால், மீண்டும் ஒரு தடவை இவ்வுலகில் நான் கால் பதிக்க மாட்டேன்” என்பதே அந்த வாக்கியம்.
1931ஆம் ஆண்டு தனது குருத்துவக் கல்வியை மேற்கொள்வதற்காக கொழும்பிலுள்ள பேணாட் குருமடத்திற்குச் சென்றார். அங்கே மெய்யியலைக் கற்றதுடன், உயிரோட்டமுள்ள ஓர் எழுத்தாளனாகவும் திகழ்ந்தார். உரோமாபுரிக்குச் சென்று இறையியல் கல்வியைத் தொடர அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இதேவேளை, அவரை ஆதரித்த கியோமர் ஆண்டகை அவரை தொடர்ந்து ஆதரிக்க மறுத்து விட்டார். இந்த வேளையில் அவருக்கு ஆதரவு தெரிவித்தவரகள் யாழ். சென் பத்திரிசியார் கல்லூரி அதிபர் சாள்ஸ் மத்தியுஸ் அடிகளார் மற்றும் சாள்ஸ் லோங் அடிகளார் ஆவர். இவர்களின் ஆதரவுடன் கேரளாவில் உள்ள சீரோ மலங்கார் ஆயரான மேதகு மார் இவானியூஸ் ஆண்டகை அவர்கள் சேவியர் அவர்களை உரோமாபுரிக்கு அனுப்பி வைத்தார்.
1934ஆம் ஆண்டு 21 வயதான சேவியர், தனது இறையியல் கல்வியை தொடர்வதற்காக கடல் வழியாக உரோமாபுரிக்கு பயணமானார். 1938 மார்ச் 19ஆம் திகதி உரோமாபுரியில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இக்காலகட்டத்திலேயே தமிழ் மொழி மீதான ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது. அங்கே வீரமாமுனிவர் கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அத்துடன் வத்திக்கான் வானொலியிலும் தமிழ் மொழி பிரிவில் பணியாற்றினார். 1939ஆம் ஆண்டு ரோமில் தனது இறையியற் கல்லூரியை நிறைவு செய்த சேவியர் தன்னை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்த இவானியூஸ் ஆண்டகையின் மறைமாவட்டத்திலே பணியாற்றுவதற்காக கேரளா, திருவனந்தபுரம் சென்றார். அங்கு பணியாற்றுவது அவருக்கு ஒத்துவரவில்லை. இதனால் தனிநாயம் அடிகளார் இவானியூஸ் ஆண்டகையின் அனுமதியில்லாமலே உரோமாபுரிக்கு மீண்டும் செல்வதற்குத் தீர்மானித்தார். பின்னர் மேதகு திபூஸியஸ் ஆண்டகை அவர்களின் மறைமாவட்டமான தூத்துக்குடியில் சேவியர் அவர்கள் தனது குருத்துவப் பணியைத் தொடர உரோமாபுரியிலுள்ள அவரது பேராசிரியர் அவருக்கு வழிசமைத்துக் கொடுத்தனர்.
1941ஆம் ஆண்டு சேவியர் அவர்கள் தனக்கு தமிழ்ப் பெயரை சூட்டுவதற்கு விரும்பி தனது தந்தையுடன் கலந்தாலோசித்து தந்தை வழி மூதாதையாரான தனிநாயகம் என்ற பெயரை சூட்டிக் கொண்டார்.
https://youtu.be/D8vaDes4pQ8 இது 1968ம் ஆண்டு தமிழாராச்சி மாநாடு நடந்த வீடியோ
மறக்காமல் பார்த்து மகிழுங்கள்.
இப்படியாக தமிழால் தமிழ் வளர்த்த அடிகளார் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
Manikkavasagar Vaitialingam
யாழ் தீவுகளும் சரித்திர பின்னணியும் ,,,,,,,
ஒரு சிறப்பு பார்வை ,,,,,,,
காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் வேலணைத்தீவின் ஒரு அதி முக்கியம் வாய்ந்த கிராமம் ஆகும் .வேலணை தீவின் ஏனைய கிராம மக்களை அன்னிய படை எடுப்புக்களில் இருந்து காக்கும் காவல் கிராமமாக இந்த கிராமம் முதன்மையில் இருந்ததால் காவலூர் என்று அழைக்கப்பட்டது .கடல்கோளின் போது யாழில் இருந்து தீவுகள் பிரிந்த வேளையில் சம்பு நகரில் இருந்த துறைமுகம் பேரழிவை சந்தித்த பின்னர் காவலூர் துறைமுகமானது . அதற்கு பின் இந்த கிராமத்தை ஊர்காவல்துறை என்ற பெயர் மாற்றி கொண்டு அழைக்க தொடங்கினார்கள்.
மகாவம்சத்தில் வழமை போல் எம் வரலாற்றை கீழ்மைபடுத்த பன்றிகள் ஏற்றிய துறைமுகம் என்று வர்ணித்து ஊறா தோட்ட என்றும் குறிப்பிடபட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடதக்கது. போர்த்துகேய மொழியில் கெயிஸ் என்றால் துறை முகம் என்று அர்த்தம் .இதை வைத்து போர்த்துகேயரால் அவர்கள் ஆண்ட காலத்தில் இந்த இடம் துறைமுகம் சார்ந்த பகுதியாய் இருந்ததால் கெயிஸ் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் .பின்வந்த ஆங்கிலேயர் அதில் தங்கள் உச்சரிப்பை புகுத்தி பின்னர் கயிற்ஸ் என்று அழைக்க தொடங்கி இருக்கலாம் . நாம் தான் ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்பதால் நாமும் நாகரீகமாக இந்த இடத்தை இன்று கயிற்ஸ் என்று அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவுடனும் ஏனைய தெற்காசிய நாடுகளுடனும் சில அரபு நாடுகளுடனும் கடல்வழி வர்த்தக தொடர்புகளை கொண்டு இருந்த ஈழ மக்கள் இந்த துறைமுகத்தில் இருந்து, ஆரம்பத்தில் யானைகளை ஏற்றுமதி செய்தும் ,குதிரைகள் ,மாடுகள் ,ஆடுகள் ,கால்நடைகளை மாற்றீடாக இறக்குமதி செய்ததாகவும் குறிப்புக்கள் உள்ளது .ஈழத்தை கைபற்றி ,எம்மை ஆண்ட அன்னியர்களான போர்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ,ஈழத்தில் சூறையாடிய பொருட்களை இந்த துறைமுகம் ஊடாக தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தியதாகவும் குறிப்புக்கள் உள்ளது . அன்னிய ஆட்சியாளர்கள் தங்களுக்கான உணவுபொருட்களை தங்கள் ஏனைய காலணி நாடுகளில் இருந்தும் தங்கள் நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யவும் இந்த துறைமுகத்தை பயன்படுத்தினார்கள் .அவ்வாறே ,பர்மா தற்போதைய மியான்மார் இல் இருந்து முதல் முதலில் ஆங்கிலேயர் அரிசியை இறக்குமதி செய்ய இந்த துறைமுகத்தை பயன்படுத்தியதாக குறிப்புக்களில் கூறப்பட்டுள்ளது .பிற்காலத்தில் பட்டுகோட்டை செட்டிமார் தங்கள் வியாபாரத்துக்கு இந்த துறைமுகத்தை பெருதும் பயன்படுத்தினர் .
தீவுகள் பிரிந்த காலத்தில் இருந்து 1960 ம் ஆண்டுவரை அனைத்து தீவு மக்களும் ஒன்றாக சங்கமிக்கும் இடமும் தமது யாழ் குடாநாட்டுக்கான பயணமும் காவலூர் துறைமுகம் ஊடாகவே நடைபெற்றது என்று அறியப்படுகின்றது .அன்னியர் ஆட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நீதிமன்றம் பொலீஸ் நிலையம் என்பனவும் அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வைத்திய வசதிகளும் சந்தை வசதிகளும் தீவு பகுதி மக்கள் முக்கியமாக ஒன்றுகூடும் இடம் காவலூராகவே இருந்தது .இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் வரை அதிக சுங்க வருமானம் பெறும் துறைமுகமாகவும் ,பலருக்கு வேலைவாய்பு அளித்த துறைமுகமாகவும் இங்கிருந்த துறைமுகம் விளங்கியது .
ஆதிகாலத்தில் இருந்தே இங்கு மக்கள் செறிந்து வாழ்ந்த ஊருண்டி என்ற பகுதிக்கு அண்மையில் காவலூரில் போர்த்துக்கேயர் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்தக் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது.இதைவிட பின்வந்த ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கடற்கோட்டை ,,ஹமன்ஹீல் ,, என அழைக்கப்படுகிறது.
இங்கு துறைமுகம் இருந்ததாலும் அன்னியர்கள் போர் வீரர்களாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் இங்கு வருகை அதிகமாக இருந்ததாலும் ,அந்நியர்களின் கட்டாய கலப்பு கொண்ட மக்கள் குழுமங்களும் இங்கு வாழ்ந்ததாக வரலாறுகள் சொல்கின்றன .இங்கு ஆரம்பத்தில் பெரும் நில சொந்தகாரர்களான அம்பலத்தார் வம்சத்தினர் ,ஐயனார் வம்சத்தினர் ,மற்றும் முதலியார் வம்சத்தினரும் என பூர்வீக ஆதி சைவ வம்சத்தினர் வாழ்ந்ததாகவும் புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்.இவர் கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறுவி அங்கு மக்களை வழிபாட்டுக்கு அழைத்து துரித மத மாற்றத்துக்கு உள்ளாகினார் என்ற கருத்தும் இருக்கிறது .அன்னியரின் கட்டாய மதம் மாற்றத்துக்கு மக்கள் ஆரம்பத்தில் மறுத்ததால் கட்டாய திருமணங்கள் செய்யவைத்து மதமாற்றம் செய்ததாகவும் வரலாறுகள் இருக்கிறது .போர்த்துகேயருடன் திருமண கலப்பு செய்து பறங்கியர் என்ற பெயர் கொண்டு அழைக்கும் குழும மக்கள் இங்கு கலந்து வாழ்ந்தார்கள் என்றும் குறிப்புக்கள் இருக்கிறது .இதற்கு உதாரணமாக பறங்கி தோட்டம் ,பறங்கி வளவு போன்ற இடப்பெயர்களை குறிப்பிடலாம் .
ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது.எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த 12000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊர்காவற்றுறைப் பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்க மதம் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இச்சனத் தொகை முக்கிய ஏனைய சமுகத்தினரையும் கொண்டு கணிப்பிடபட்டுள்ளது என்பதற்கு இங்குள்ள ஆலயங்கள் சான்று பகருகின்றன.இங்கு பெரும் பாலும் இங்கு இருந்த பூர்வீக ஆதி சைவ மக்கள் மதமாற்றம் பெற்றே கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டார்கள் ,என்று கருதபடுகின்றது .அதற்கு ஆதாரமாக இன்றும் பெயர்மாறாமல் இருக்கும் அம்பலர் புலம் ஐயப்பன் தோட்டம் என்பன சான்றாகும் .இங்கு மதங்களால் வேறுபட்ட சமூகத்தினர் வாழ்ந்தாலும் ,சிவன் கோவில் திருவிழா நிகழ்வுகளாய் இருந்தாலும் புனித அந்தோனியார் ,புனித மரியாள் ஆலய நிகழ்வுகளாய் இருந்தாலும் மக்கள் ஒன்றுபட்டு நின்று கலைகளை வளர்த்தார்கள் ,விசேடமாக சின்னமேளம் ,இசை நடனம் நாட்டுக்கூத்து என சகல கலைகளையும் வளர்த்தார்கள் .விசேட நிகழ்வுகளில் அண்ணாவியார்களின் நெறியாள்கையில் இங்கு நிகழும் நாட்டுகூத்தை காண ஈழத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்று சொல்லப்படுகின்றது .
இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை பாரம்பரிய தொழிலாக கொண்டு இருந்தாலும் கடல்வழி வியாபாரத்தையும் ,மீன் பிடி தொழிலையும் ,கால்நடை வளர்ப்பு ,கப்பல் கட்டும் தொழில் ,போன்றவற்றையும் ,போர்த்துகேயர் வருகைக்கு பின்னர் மேலதிகமாக நெசவு தொழிலையும் செய்து வந்ததாக அறிய முடிகின்றது .1960 ஆண்டுவரை பெரும் தொகை யாழ் மற்றும் தீவக தொழிலார்கள் இங்குள்ள துறைமுக பகுதியில் வேலைக்கு அமர்த்தபட்டு இருந்ததாக அறியமுடிகின்றது .
கல்வியில் சிறந்து விளங்கிய இந்த கிராமத்தில் பல தவப்புதல்வர்கள் உலக அரங்கில் புகழ் பெற்ற அரசியல் ஆளர்களாகவும் அறிவியல் ஆளர்களாகவும் விளங்கி இருக்கின்றார்கள் ,இவர்கள் கல்வியில் புனித மரியாள் மகளீர் வித்தியாலயம் ,புனித அந்தோனியார் கல்லூரி என்பனவும் அயல் கிராம பாடசாலைகளும் காவலூர்மக்களின் கல்வியில் பெரும் சேவை வழங்கியது .
விளையாட்டு துறையிலும் காவலூர் பற்றி சில குறிப்புகள் இருக்கிறது மாட்டு வண்டில் ஓட்டம் ,இங்கு ஒரு பாரம்பரிய கலையாகவும் வீர விளையாட்டாகவும் அன்று தொட்டு நடத்தி வந்து இருக்கின்றார்கள் .ஊர்காவற்றுறையிலிருந்து வடக்குநோக்கி எட்டாவது கல் தொலைவிலே நாய்க்குட்டியான் வாய்க்கால் என்ற இடத்தில் உள்ள பெரு வெளி கொண்ட பிரதேசத்தில் காவலூர் மக்கள் நடத்தும் மாட்டு வண்டி போட்டி வரலாற்று சிறப்புமிக்கது ,படகோட்ட போட்டியும் நீச்சல் போட்டியும் நடைபெற்று இருக்கின்றது .பிற்காலத்தில் சைக்கில் ஓட்டம் மற்றும் ஏனைய விளையாட்டு போட்டிகளும் இங்கு சிறப்பு நிகழ்வாக வருடம் தோறும் நடைபெற்று வந்திருகின்றது .
துறைமுகம் ,கோவில்கள் ,பாடசாலைகள் ,வைத்திய சாலை ,நீதி மன்றம் ,தபாலகம் ,நூலகம் ,சந்தை ,சிறு தொழில் நிறுவனங்கள் என சகல வசதிகளும் கொண்டு சிறப்பாக இயங்கிவந்த காவலூர் வாழ்ந்த மக்களும் போர் தந்த வடுக்களால் இடம் பெயரவும் புலம்பெயரவும் வேண்டிய நிற்பந்தம் 1990 களில் ஏற்பட தொடங்கியது .அன்னை மண்ணை பிரிந்து வாழும் துர்பாக்கிய நிலைக்கு அந்த மக்களும் தள்ளப்பட்டார்கள் .இடம் பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் வாழ்ந்தாலும் ,தங்கள் கலை கலாசாரம் பாரம்பரிய நிகழ்வுகளை மறவாத மக்களாக தரணி எங்கும் அவர்கள் வாழ்கின்றார்கள் .தாய் நிலத்தில் வாழும் மக்களுக்கும் தங்கள் கிராம முன்னேற்ற பணிகளுக்கும் பல்வேறு வழிகளில் அமைப்புக்கள் ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை புரிந்து, போரினால் பெரிதும் பாதிக்கபட்ட அன்னை மண்ணை மீளவும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கின்றார்கள்.
இயற்கை அழகும் ,கடல் வளமும் ,துறைமுகமும் சகல வளங்களும் கொண்ட காவலூர் மக்கள் ,கல்வி அறிவும் ,கலை நயமும் ,சமுதாய நலன்களில் அக்கறையும் கொண்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .ஈழ வரலாற்றில் காவலூரும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நிறுவி இருக்கிறது என்பதும் பெருமைபடதக்க விடயம் ஆகும்.
சாந்தினி சுப்ரமணியம்
March 6, 2020
மகாவம்சத்தில் வழமை போல் எம் வரலாற்றை கீழ்மைபடுத்த பன்றிகள் ஏற்றிய துறைமுகம் என்று வர்ணித்து ஊறா தோட்ட என்றும் குறிப்பிடபட்டு உள்ளதும் இங்கு குறிப்பிடதக்கது. போர்த்துகேய மொழியில் கெயிஸ் என்றால் துறை முகம் என்று அர்த்தம் .இதை வைத்து போர்த்துகேயரால் அவர்கள் ஆண்ட காலத்தில் இந்த இடம் துறைமுகம் சார்ந்த பகுதியாய் இருந்ததால் கெயிஸ் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் .பின்வந்த ஆங்கிலேயர் அதில் தங்கள் உச்சரிப்பை புகுத்தி பின்னர் கயிற்ஸ் என்று அழைக்க தொடங்கி இருக்கலாம் . நாம் தான் ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்பதால் நாமும் நாகரீகமாக இந்த இடத்தை இன்று கயிற்ஸ் என்று அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவுடனும் ஏனைய தெற்காசிய நாடுகளுடனும் சில அரபு நாடுகளுடனும் கடல்வழி வர்த்தக தொடர்புகளை கொண்டு இருந்த ஈழ மக்கள் இந்த துறைமுகத்தில் இருந்து, ஆரம்பத்தில் யானைகளை ஏற்றுமதி செய்தும் ,குதிரைகள் ,மாடுகள் ,ஆடுகள் ,கால்நடைகளை மாற்றீடாக இறக்குமதி செய்ததாகவும் குறிப்புக்கள் உள்ளது .ஈழத்தை கைபற்றி ,எம்மை ஆண்ட அன்னியர்களான போர்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ,ஈழத்தில் சூறையாடிய பொருட்களை இந்த துறைமுகம் ஊடாக தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தியதாகவும் குறிப்புக்கள் உள்ளது . அன்னிய ஆட்சியாளர்கள் தங்களுக்கான உணவுபொருட்களை தங்கள் ஏனைய காலணி நாடுகளில் இருந்தும் தங்கள் நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யவும் இந்த துறைமுகத்தை பயன்படுத்தினார்கள் .அவ்வாறே ,பர்மா தற்போதைய மியான்மார் இல் இருந்து முதல் முதலில் ஆங்கிலேயர் அரிசியை இறக்குமதி செய்ய இந்த துறைமுகத்தை பயன்படுத்தியதாக குறிப்புக்களில் கூறப்பட்டுள்ளது .பிற்காலத்தில் பட்டுகோட்டை செட்டிமார் தங்கள் வியாபாரத்துக்கு இந்த துறைமுகத்தை பெருதும் பயன்படுத்தினர் .
தீவுகள் பிரிந்த காலத்தில் இருந்து 1960 ம் ஆண்டுவரை அனைத்து தீவு மக்களும் ஒன்றாக சங்கமிக்கும் இடமும் தமது யாழ் குடாநாட்டுக்கான பயணமும் காவலூர் துறைமுகம் ஊடாகவே நடைபெற்றது என்று அறியப்படுகின்றது .அன்னியர் ஆட்சி தொடங்கிய காலத்தில் இருந்து நீதிமன்றம் பொலீஸ் நிலையம் என்பனவும் அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வைத்திய வசதிகளும் சந்தை வசதிகளும் தீவு பகுதி மக்கள் முக்கியமாக ஒன்றுகூடும் இடம் காவலூராகவே இருந்தது .இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் வரை அதிக சுங்க வருமானம் பெறும் துறைமுகமாகவும் ,பலருக்கு வேலைவாய்பு அளித்த துறைமுகமாகவும் இங்கிருந்த துறைமுகம் விளங்கியது .
ஆதிகாலத்தில் இருந்தே இங்கு மக்கள் செறிந்து வாழ்ந்த ஊருண்டி என்ற பகுதிக்கு அண்மையில் காவலூரில் போர்த்துக்கேயர் ஒரு கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்தக் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகிறது.இதைவிட பின்வந்த ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கடற்கோட்டை ,,ஹமன்ஹீல் ,, என அழைக்கப்படுகிறது.
இங்கு துறைமுகம் இருந்ததாலும் அன்னியர்கள் போர் வீரர்களாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் இங்கு வருகை அதிகமாக இருந்ததாலும் ,அந்நியர்களின் கட்டாய கலப்பு கொண்ட மக்கள் குழுமங்களும் இங்கு வாழ்ந்ததாக வரலாறுகள் சொல்கின்றன .இங்கு ஆரம்பத்தில் பெரும் நில சொந்தகாரர்களான அம்பலத்தார் வம்சத்தினர் ,ஐயனார் வம்சத்தினர் ,மற்றும் முதலியார் வம்சத்தினரும் என பூர்வீக ஆதி சைவ வம்சத்தினர் வாழ்ந்ததாகவும் புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்.இவர் கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறுவி அங்கு மக்களை வழிபாட்டுக்கு அழைத்து துரித மத மாற்றத்துக்கு உள்ளாகினார் என்ற கருத்தும் இருக்கிறது .அன்னியரின் கட்டாய மதம் மாற்றத்துக்கு மக்கள் ஆரம்பத்தில் மறுத்ததால் கட்டாய திருமணங்கள் செய்யவைத்து மதமாற்றம் செய்ததாகவும் வரலாறுகள் இருக்கிறது .போர்த்துகேயருடன் திருமண கலப்பு செய்து பறங்கியர் என்ற பெயர் கொண்டு அழைக்கும் குழும மக்கள் இங்கு கலந்து வாழ்ந்தார்கள் என்றும் குறிப்புக்கள் இருக்கிறது .இதற்கு உதாரணமாக பறங்கி தோட்டம் ,பறங்கி வளவு போன்ற இடப்பெயர்களை குறிப்பிடலாம் .
ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது.எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த 12000 இற்கு மேற்பட்ட மக்கள் ஊர்காவற்றுறைப் பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்க மதம் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இச்சனத் தொகை முக்கிய ஏனைய சமுகத்தினரையும் கொண்டு கணிப்பிடபட்டுள்ளது என்பதற்கு இங்குள்ள ஆலயங்கள் சான்று பகருகின்றன.இங்கு பெரும் பாலும் இங்கு இருந்த பூர்வீக ஆதி சைவ மக்கள் மதமாற்றம் பெற்றே கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டார்கள் ,என்று கருதபடுகின்றது .அதற்கு ஆதாரமாக இன்றும் பெயர்மாறாமல் இருக்கும் அம்பலர் புலம் ஐயப்பன் தோட்டம் என்பன சான்றாகும் .இங்கு மதங்களால் வேறுபட்ட சமூகத்தினர் வாழ்ந்தாலும் ,சிவன் கோவில் திருவிழா நிகழ்வுகளாய் இருந்தாலும் புனித அந்தோனியார் ,புனித மரியாள் ஆலய நிகழ்வுகளாய் இருந்தாலும் மக்கள் ஒன்றுபட்டு நின்று கலைகளை வளர்த்தார்கள் ,விசேடமாக சின்னமேளம் ,இசை நடனம் நாட்டுக்கூத்து என சகல கலைகளையும் வளர்த்தார்கள் .விசேட நிகழ்வுகளில் அண்ணாவியார்களின் நெறியாள்கையில் இங்கு நிகழும் நாட்டுகூத்தை காண ஈழத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவார்கள் என்று சொல்லப்படுகின்றது .
இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயத்தை பாரம்பரிய தொழிலாக கொண்டு இருந்தாலும் கடல்வழி வியாபாரத்தையும் ,மீன் பிடி தொழிலையும் ,கால்நடை வளர்ப்பு ,கப்பல் கட்டும் தொழில் ,போன்றவற்றையும் ,போர்த்துகேயர் வருகைக்கு பின்னர் மேலதிகமாக நெசவு தொழிலையும் செய்து வந்ததாக அறிய முடிகின்றது .1960 ஆண்டுவரை பெரும் தொகை யாழ் மற்றும் தீவக தொழிலார்கள் இங்குள்ள துறைமுக பகுதியில் வேலைக்கு அமர்த்தபட்டு இருந்ததாக அறியமுடிகின்றது .
கல்வியில் சிறந்து விளங்கிய இந்த கிராமத்தில் பல தவப்புதல்வர்கள் உலக அரங்கில் புகழ் பெற்ற அரசியல் ஆளர்களாகவும் அறிவியல் ஆளர்களாகவும் விளங்கி இருக்கின்றார்கள் ,இவர்கள் கல்வியில் புனித மரியாள் மகளீர் வித்தியாலயம் ,புனித அந்தோனியார் கல்லூரி என்பனவும் அயல் கிராம பாடசாலைகளும் காவலூர்மக்களின் கல்வியில் பெரும் சேவை வழங்கியது .
விளையாட்டு துறையிலும் காவலூர் பற்றி சில குறிப்புகள் இருக்கிறது மாட்டு வண்டில் ஓட்டம் ,இங்கு ஒரு பாரம்பரிய கலையாகவும் வீர விளையாட்டாகவும் அன்று தொட்டு நடத்தி வந்து இருக்கின்றார்கள் .ஊர்காவற்றுறையிலிருந்து வடக்குநோக்கி எட்டாவது கல் தொலைவிலே நாய்க்குட்டியான் வாய்க்கால் என்ற இடத்தில் உள்ள பெரு வெளி கொண்ட பிரதேசத்தில் காவலூர் மக்கள் நடத்தும் மாட்டு வண்டி போட்டி வரலாற்று சிறப்புமிக்கது ,படகோட்ட போட்டியும் நீச்சல் போட்டியும் நடைபெற்று இருக்கின்றது .பிற்காலத்தில் சைக்கில் ஓட்டம் மற்றும் ஏனைய விளையாட்டு போட்டிகளும் இங்கு சிறப்பு நிகழ்வாக வருடம் தோறும் நடைபெற்று வந்திருகின்றது .
துறைமுகம் ,கோவில்கள் ,பாடசாலைகள் ,வைத்திய சாலை ,நீதி மன்றம் ,தபாலகம் ,நூலகம் ,சந்தை ,சிறு தொழில் நிறுவனங்கள் என சகல வசதிகளும் கொண்டு சிறப்பாக இயங்கிவந்த காவலூர் வாழ்ந்த மக்களும் போர் தந்த வடுக்களால் இடம் பெயரவும் புலம்பெயரவும் வேண்டிய நிற்பந்தம் 1990 களில் ஏற்பட தொடங்கியது .அன்னை மண்ணை பிரிந்து வாழும் துர்பாக்கிய நிலைக்கு அந்த மக்களும் தள்ளப்பட்டார்கள் .இடம் பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் வாழ்ந்தாலும் ,தங்கள் கலை கலாசாரம் பாரம்பரிய நிகழ்வுகளை மறவாத மக்களாக தரணி எங்கும் அவர்கள் வாழ்கின்றார்கள் .தாய் நிலத்தில் வாழும் மக்களுக்கும் தங்கள் கிராம முன்னேற்ற பணிகளுக்கும் பல்வேறு வழிகளில் அமைப்புக்கள் ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை புரிந்து, போரினால் பெரிதும் பாதிக்கபட்ட அன்னை மண்ணை மீளவும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கின்றார்கள்.
இயற்கை அழகும் ,கடல் வளமும் ,துறைமுகமும் சகல வளங்களும் கொண்ட காவலூர் மக்கள் ,கல்வி அறிவும் ,கலை நயமும் ,சமுதாய நலன்களில் அக்கறையும் கொண்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .ஈழ வரலாற்றில் காவலூரும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நிறுவி இருக்கிறது என்பதும் பெருமைபடதக்க விடயம் ஆகும்.
சாந்தினி சுப்ரமணியம்
March 6, 2020
The History of St. Anthony's Church, Kayts
09.01.2019
The present building of St. Anthony's Church in Kayts, located facing St. Anthony's College was completed in 1820, during British rule, soon after the departure of Dutch rulers. From the recorded history of this church, it is clear that this church has played an important role in the history of the Catholics of Kayts Island. For a very long period, this church functioned as the administrative centre for the Catholics of not only for the whole of Kayts but also for the adjoining islands in the archipelago. There are a large number of documents still available at the Bishop’s house in Jaffna to prove this.
From the historical reports of Fr. Gnanapragasar of Nallur it is known that initially a church for St. Thomas was constructed at the present site. During the time of the Dutch regime, the Roman Catholicism was suppressed in Sri Lanka. It must have happened in other countries too where the Dutch domination existed. Because of the ruthless activities of the Dutch many statues were secretly taken away by the devoted Christians and hidden away within the tree trunks, wells and the other safe places where the Dutch could not find them. After the departure of the Dutch, our St. Anthony statue was found hidden in a tree trunk in the piece of shrub land near the church and was discovered by a wood cutter. The wood cutter informed this to the parish priest who rushed to the spot and brought the statue in procession and placed it in the church.
Soon a large number of devotees began to venerate the statute of St. Anthony. Within a short period of time, a number of miracles attributed to the power of St. Anthony began to take place and the fame of this saint began to spread everywhere. As a result, St. Thomas Church was renamed as St. Anthony's Church. We are blessed to have St. Anthony as our community saint. He is the most popular saint in the Christian churches. Wherever in the world, one enters the church; will find St. Anthony welcoming at the entrance of the churches. We are blessed and honoured that he has become the pride and joy of our community.
Grotto of our Lady of Lourdes located within the premises of Kayts St. Anthony’s church was built in 1936 by Mr. & Mrs. Emmanuel Varapragasam, the parents of Rt. Rev. Dr. Thomas Savundranayagamn, Emeritus Bishop of Jaffna, as an act of thanksgiving to Our Lady of Lourdes for answering their humble petition for the gift of a baby. The facade of the church originally built according to Portuguese architecture was later modernized during 1975. The Portico built in remembrance of the Sacerdotal Silver Jubilee (21.12.1988) of Bishop Thomas Savundranayagam was blessed and ceremoniously declared open by Rev. Fr. S. F. Kirupananthan, Parish Priest of Kayts, on 13th June 1990.
The Belfry at St. Anthony's church, Kayts was erected by Mr. &. Mrs. Anthonipillai, Retired Post Master and handed over on 12-06-1931 in remembrance of their son Henry Julain. A new parapet wall was built on the roadside as the original wall and the 200 year old Tamarind tree were demolished by the local authorities to widen the main road.
Soon a large number of devotees began to venerate the statute of St. Anthony. Within a short period of time, a number of miracles attributed to the power of St. Anthony began to take place and the fame of this saint began to spread everywhere. As a result, St. Thomas Church was renamed as St. Anthony's Church. We are blessed to have St. Anthony as our community saint. He is the most popular saint in the Christian churches. Wherever in the world, one enters the church; will find St. Anthony welcoming at the entrance of the churches. We are blessed and honoured that he has become the pride and joy of our community.
Grotto of our Lady of Lourdes located within the premises of Kayts St. Anthony’s church was built in 1936 by Mr. & Mrs. Emmanuel Varapragasam, the parents of Rt. Rev. Dr. Thomas Savundranayagamn, Emeritus Bishop of Jaffna, as an act of thanksgiving to Our Lady of Lourdes for answering their humble petition for the gift of a baby. The facade of the church originally built according to Portuguese architecture was later modernized during 1975. The Portico built in remembrance of the Sacerdotal Silver Jubilee (21.12.1988) of Bishop Thomas Savundranayagam was blessed and ceremoniously declared open by Rev. Fr. S. F. Kirupananthan, Parish Priest of Kayts, on 13th June 1990.
The Belfry at St. Anthony's church, Kayts was erected by Mr. &. Mrs. Anthonipillai, Retired Post Master and handed over on 12-06-1931 in remembrance of their son Henry Julain. A new parapet wall was built on the roadside as the original wall and the 200 year old Tamarind tree were demolished by the local authorities to widen the main road.
Historical facts about St. Anthony's Church
In 1932, Rt. Rev. Dr. Guyomar, the Bishop of Jaffna visited Kayts and laid a special plague on the wall of St. Anthony's Church to mark the occasion of seventh centenary celebration of the ascent to heaven of St. Anthony of Padua. It is worthy of mention that Very. Rev. Henri Joulain (1852-1919) and Very Rev. Andre Theophile Melizan (1844-1905) both former Bishops of Jaffna at one time served as parish priests in Kayts and were residing in the priest's residence in this church. In 1857 Rt. Rev. Jean Etienne Semeria, the Bishop of Jaffna conducted a grand retreat at St. Anthony’s church, Kayts. Rt. Rev. Bonjean the Bishop of Jaffna who was a priest at that time also attended this retreat.
In 1900 Cholera disease was prevalent in Kayts causing the death of hundreds of people. According to church records Bishop of Jaffna Very Rev. Henri Joulain on hearing about this epidemic, rushed to Kayts, genuflected in front of the statute of Anthony, and prayed. Then the statute of St. Anthony was taken in procession around the church and soon the disease stopped spreading. Further, the Bishop also sent two boatloads of relief materials to meet the needs of the parishioners of Kayts.
In 1905 Msgr. Seleski, the papal representative paid a visit to Kayts and was accorded a grand welcome at St. Antony's Church. The Golden anniversary of the 1857 grand retreat was celebrated in 1908 in the presence of the Bishop of Jaffna, Very Rev. Henri Joulain. During this occasion the memorial cross planted in 1857 in front of the church was renewed. During the period 1911-1913, when Rev. Fr. Owen William was the Parish Priest of Kayts the residence for the priest adjoining the church was built. In 1913 during a visit to Kayts by Superior General of O M I Very Rev. Denton, the papal blessing was imparted to the entire island of Kayts.
In 1921, the centenary celebration of this church was held in a grand scale and the special mass was celebrated by Very Rev. Jules - Andre Brault the Bishop of Jaffna. On that occasion Rev. Fr. L. Augustine from Karampon was ordained as priest. This was the first ever ordination held outside of St. Mary's Cathedral, Jaffna. In 1970, Rt. Rev. L. R. Antony, Auxiliary Bishop of Jaffna officiated during the 150th anniversary celebrations of this church. However, in 1995 it was not possible to conduct the 175th anniversary celebrations due to the civil war prevailed in the country. The parishioners of this church are anxiously waiting to celebrate the 200th anniversary in 2020.
Rev. Fr. Thomas Savundranayagam said the First Mass at St. Anthony’s Church on 23.12 196
In 1981 a grand welcome was accorded to Bishop Thomas Savundranayagam soon after being consecrated as the first bishop of the new diocese of Mannar.
Episcopal Silver Jubilee Celebrations of Rt. Rev. Dr. Thomas Savundranayagam, the Bishop of Jaffna – 30.07.200
On 30th July 2006 Papal delegate (Nuncio) Arch Bishop Mario Cenari visited Kayts to attend the Silver Jubilee Celebration of Rt. Rev. Dr. Thomas Savundranayagam Bishop of Jaffna held at St. Anthony's Church. Bishop of Trincomalee Rt. Rev. Kingsley Swampillaii, Bishop of Mannar Rt. Rev. Rayappu Joseph as well as Monsignor Camillus Nimalan from Vatican graced the occasion. Also a large number of priests and nuns attended this function
Ancestry of parishioners of Kayts East
From ancient records of the church it appears that the people of Kayts East are the descendants of the martyrs of Mannar. They initially settled in Chaddi, got involved in farming and became very wealthy. Later, they gradually moved to Naranthanai and Velanai. When the Kayts harbour began to gain prominence and sea trading began to develop, the people in this area were attracted towards shipping industry resulting in many highly qualified Captains, Marine Engineers and Tug masters being produced from Kayts East. Many others were able to obtain high-ranking positions in Navy and Customs. A large number of them also became well educated and are at present holding very prestigious positions in various fields throughout the world.
Let us take pride that we are the unique community of Kayts with the blessings of St. Anthony!
Let us adore St. Anthony with our prayers and honour him!
Let us create and cultivate unity in diversity within as we are one and we belong to each other!
Let us take pride that we are the unique community of Kayts with the blessings of St. Anthony!
Let us adore St. Anthony with our prayers and honour him!
Let us create and cultivate unity in diversity within as we are one and we belong to each other!
{This article was originally written in Tamil by Mr. J. F. Jegarajasingham (a well known journalist of Sri Lanka and a prominent member of Kayts East Community) in 1995 for the Centenary Souvenir of St. Mary’s Church Kayts, translated in 2017 for “The Historical Records of Kayts Island” and updated in 2019 for www.kayts-east.weebly.com}.
Kayts East: St. Anthony. An old church which has undergone many transformations (1894-1904) and has a beautiful appearance. The floor was lately cemented (1912) at the expenses of Mr. L. Santhumutto's family. The residence of the fathers with two rooms and a spacious hall was made more commodious and healthy under Fr. W. Owen. On 3 May 1908 the Bishop Henry Joulain performed the solemn blessing of the church. On this occasion he also blessed and set up a large brass-plated cross on the seashore in place of the decayed Mission cross of 1957 which has been planted there by Fathers Bonjean (later Bishop), Chounavel and Lebesecou. The present cross is the gift of a parishioner, Mr. Saverimuhtu. The devotion of the people to this cross is a touching vestige of old-time pious practices.
Nalloor Swami Gnana Prakasar (OMI) 1925.
Nalloor Swami Gnana Prakasar (OMI) 1925.
காவலூரின் வரலாறு
காவலூர் றமில்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பு
31-08-2018
காவலூர் றமில்டன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்பு
31-08-2018
அறிமுகம்
இலங்கையின் வட மாகாணத்தின் பண்டைய சிறப்புமிக்க துறைமுகமாக விளங்கியது ஊர்காவற்றுறை ஆகும்."லைடன் தீவு" என ஒல்லாந்தரால் அழைக்கப்பட்ட இத்தீவின் வடமேற்கில் ஊர்காவற்றுறை அமைந்துள்ளது. "லைடன் தீவு" "வேலணை தீவு"எனவும் அழைக்கப்படுகின்றது. நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை "தணதீவு" எனக் குறிப்பிடுகின்றது. கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்தே ஊர்காவற்றுறை துறைமுகமாக இருந்தது என சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆறாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் இது துறைமுகமாக இருந்தது என வரலாறு சான்று பகர்கிறது. போத்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு முன் தென் இலங்கை அரசனாக இருந்த ஆறாம் வேதம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண அரசை வெற்றி கொண்டு ஊர்காவற்றுறை துறைமுகத்தில் ஆதிக்கஞ் செலுத்தியதாக கூறப்படுகிறது. காலக்கதியில் இது ஒரு துறைமுக நகரமாக உருவெடுத்தது. ஊரின் பெயர் எப்படி உருவாகியது? ஊர்காவற்றுறை என்ற பெயர் வரக் காரணம் என்ன என்று ஆராயின் ஊரைக் காவல் செய்கின்ற வகையில் இந்த துறைமுகம் அமைந்திருந்தமையால் அவ்வாறு பெயர் வந்தது என்பர். "ஊரான் தோட்டம்" என முன்பு வழக்கில் இருந்த பெயர் சிங்களத்தில் "ஊறாதொட்ட" என வந்தது எனச் சொல்பவருமுளர். ஆனால் யானைகள் இத்துறைமுகத்தினூடாக ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இப்பொழுது ஆங்கிலத்தில் "கயிற்ஸ்" (Kayts) என வழங்கப்படும் பெயர் ஆங்கிலேயரால் சுட்டப்பட்டது என்பர். ஆய்வுகளின் படி இது போத்துக்கேய சொல்லில் இருந்து மருவி வந்தது எனத் தெரிகிறது. போத்துக்கேய மொழியில் "கேயிஸ்" என்றால் துறைமுகம் என்பது பொருள். அதிலிருந்தே பின் "கயிற்ஸ்" என்ற பதம் ஆங்கிலத்தில் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என்று விளக்கம் தரப்படுகின்றது. பொற்காலம் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு இயற்கை துறைமுகம் ஊர்காவற்றுறை ஆகும். வடகீழ், தென்மேல் பருவகாலங்கள் இரண்டிலும் பாதுகாப்பான துறையாக இது விளங்குவது விசேட அம்சமாகும். பன்னெடுங்காலமாக காவலூர் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது. தமிழ் நாட்டுடன் நெருங்கிய தொடர்பிருந்தமையால் அந்நாட்டுத் துறைமுகங்கள் வரை சென்று பண்டமாற்று வணிகம் செய்திருக்க வாய்ப்புள்ளது. பல தென்கிழக்காசிய நாடுகள் வரை காவலூர் மாலுமிகள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே ஊர்காவற்றுறை துறைமுகம் மிகவும் புகழ் பெற்றிருந்தது எனலாம். பிரித்தானியர் ஆசிய நாடுகளான பர்மா (மியான்மார்), சயாம், றங்கூன், முதலிய நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தனர். இந்த இறக்குமதி வர்த்தகத்தில் பிரதான பங்கெடுத்துக் கொண்ட பட்டுக்கோட்டை செட்டிமார், ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, முதலிய துறைமுகங்களை இறக்குமதி வர்த்தகத்துக்கு பயன்படுத்தினர். அக்காலப் பகுதியில் காவலூர் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தது. கப்பல்கள், படகுகள், டிங்கிகள், தோணிகள் என்று துறைமுகம் மரக்கலங்களால் நிறைந்திருக்கும். பனைமர அளவுக்கு உயரமான பாய்மரங்கள் வானைமுட்டி உயர்ந்து நிற்க, பாரிய கப்பல்கள் எந்நேரமும் நங்கூரமிட்டுச் சரக்குகளை இறக்கும் காட்சியை அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கண்டவர்கள் பலர் இன்றும் சீவந்தராய் இருக்கிறார்கள். படகுகளில் பணியாற்றிய மாலுமிகளில் ஒரு சிலர் இன்றும் பண்டைய நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்க்கிறார்கள். கறிச் சரக்கு வகைகள், வெங்காயம், மிளகாய், சர்க்கரை முதல் கலிக்கட் ஓடு வரை கரை இறக்கப்பட்ட அந்த செழிப்பான காலத்தை எண்ணிப் பார்க்க பெருமையளிக்கிறது. முந்நாளில் காவலூர் துறைமுகம் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். அது காவலூரின் பொற்காலம் ஆகும். செழிப்பான அந்த நாட்கள் என்று வருமோ?? பட்டுக்கோட்டை செட்டிமாரின் செல்வாக்கினால் காவலூரிலும் கப்பல் கட்டும் தொழில், படகுத்துறை தொழில் என்பன விருத்தி அடைந்தன. பலர் வேலைவாய்ப்பு பெற்றதோடு, மாலுமிகளாகவும் கப்பல் உரிமையாளர்களாகவும் மிகுந்த உச்சநிலையில் இருந்தனர். யுத்தகாலப் பஞ்ச நிலைமைகள் காவலூரை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. காவலூர் அரிசி களஞ்சியமாக இருந்ததால் அரிசிக்கும் பஞ்சம் இருக்கவில்லை. அறுபதுகளுக்கு பின் சப்த தீவு மக்களும் சங்கமமாகும் இடம் காவலாராகவே இருந்தது. 1960 ஆம் ஆண்டு வரை நெடுந்தீவு உட்பட அனைத்து தீவு மக்களும் ஊர்காவற்றுறை துறைமுகம் வந்து தான் காரைநகர் ஊடாக யாழ்ப்பாணம் சென்றனர். ஊர்காவற்றுறை அரசினர் வைத்தியசாலையே அனைவருக்கும் மருத்துவப் பணிக்கு நடுநிலையமாக இருந்தது. பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்பன காவலூர் பட்டணத்திலேயே இருந்தன. இதன் காரணமாக நீதித்துறை சார்ந்த சகல தேவைகள், சட்டத்தோடு தொடர்புடைய குற்றவியல் விசாரனைகள், வழக்குகள் அனைத்தும் காவலூரில் இடம்பெற்றமையால் நீதிமன்றம் கூடும் நாட்களில் தீவுப்பகுதி மக்கள் இங்கு கூடுவது வழக்கம். அதனால் ஊர்காவற்றுறை சந்தை எப்பொழுதும் கலகலப்பாகவே காணப்படும். 1950 ஆம் ஆண்டு வரை காவலூர் சுங்கப் பகுதி கொழும்புக்கு அடுத்ததாக வருமானத்தில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தது. சுங்கப் பகுதியில் அநேக மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நல்லின காளை மாடுகளும் ஆடுகளும் காவலூரின் மேற்கில் உள்ள மாட்டுக்காலை எனப்படும் தடைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு நோய்த்தடுப்புச் செய்யப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. மிருகங்களுக்கு மாத்திரமல்ல மனிதர்களுக்கான அம்மை நோய்த் தடுப்பு முகாமும் மாட்டுக்காலையை அண்மித்த ஊர்காவற்றுறை மேற்கு பிரதேசத்தில் அமைந்திருந்தது. சுகாதார வைத்தியப் பகுதியினர் இத்தடுப்பு நிலையத்தை பராமரித்து வந்தனர். ஆய்வுக்குட்பட்ட ஆதிக் குடியேற்றம் கிராம சேவகர் பணிகளை இலகுவாக்க தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட பரவலாக்கல் பிரிவுகளின்படி உருவாக்கப்பட்ட கரம்பொன் வடக்கு பிரிவு ஊர்காவற்றுறை மேற்கை அடுத்த பகுதியாகும். மாட்டுக்காலையை அண்மித்த கரம்பொன் வடக்கு பகுதியே ஆதிக் குடியேற்றப் பகுதியாக கருதப்படுகிறது. ஊருண்டி என முன்னர் அழைக்கப்பட்ட இப்பகுதியே முதன் முதலில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதி என்பது ஆய்வாளர் கருத்தாக இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரான கலாநிதி பொ. இரகுபதி அவர்கள் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது ஆய்வு குறிப்புக்களின்படி இப்பகுதி செம்மண் கலந்த பூமியாக இருந்தது என்றும் மக்கள் இங்கு குடியேறியிருந்தமையினாலேயே போத்துக்கேயர் இப்பகுதியில் கோட்டையைக் கட்டினார்கள் என்றும் தெரிய வருகிறது. அந்த கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் பழங்கோட்டை என அழைக்கப்பட்டு வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோட்டைப் பகுதியில் யாழ் திருமறைக் கலாமன்றத்தினர் திருப்பாடுகளின் காட்சியை (இயேசு சிலுவையில் மரித்த காட்சியை) ஒளிப்படமாக்கியது குறிப்பிடத்தக்பது. இப்பிரதேசம் கல்வாரி மலையை ஒத்திருந்தமை இந்த புனித நிகழ்வை காட்சிப்புலமாக்க உதவியது. போத்துக்கேயரின் கீழ்த்திசை ஆட்சிக்காலம் தொடர்பான வரலாற்று நிபுணரான இலண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சி.ஆர். பொக்ஸர் இலங்கையிலுள்ள போத்துக்கேயரின் கோட்டைகளை இனங்கண்டு ஆய்ந்த போது அவற்றுள் ஒன்றைப் பற்றிய ஐயமேற்பட்ட போது ஊர்காவற்றுறைக்கு வந்து இந்த பழங்கோட்டையை பார்த்த பின்னரே தான் தவறவிட்ட கோட்டை அது தான் என்பதை நிச்சயப்படுத்தி தெரிந்து கொண்டார். பேராசிரியர் பொக்ஸர் அவர்களை அழைத்து வந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று அறிஞரான கலாநிதி திகிரி அபயசிங்க அவர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளார். கலாநிதி இராமகிருஷ்ணன் அவர்களும் இவ்வாய்வுக்கு உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கரையில் உள்ள போத்துக்கேயரின் பழங்கோட்டையை விட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இன்னுமொரு வரலாற்று மீதி ஊர்காவற்றுறைக்கு பெருமை தருகிறது. காவலூருக்கும் காரைநகர் கடற்படைத் தளத்துக்குமிடையில் அமைந்துள்ள கடற்கோட்டை இலங்கையில் காணக்கூடிய மிக அபூர்வ வரலாற்று மூலமாகும். ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட இக்கடற்கோட்டை "ஹமன்ஹீல்" என அழைக்கப்படுகிறது. 1990ம் ஆண்டுக்கு பின் அது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவலூரின் குடிப்பரம்பல் எப்போது ஏற்பட்டது என்பது பற்றித் தெளிவாக அறிய முடியவில்லை. தென்னிந்தியாவில் மணற்பாடு, தூத்துக்கடி, இராமேஸ்வரம், பாம்பன், திருநெல்வேலி முதலிய இடங்களிலிருந்து வந்த மக்கள் தீவுப்பகுதியில் குடியேறியிருக்கலாம். இந்திய படையெழுச்சியின் போது போர் வீரர்களாகவும் படைகளுக்கு துணையாகவும் வந்தவர்கள் இங்கு குடியமர்ந்திருக்கலாம். வியாபார நோக்கத்தோடு வந்தவர்களில் சிலர் இங்கு தங்கி அவர்களின் சந்ததி பெருகியும் இருக்கலாம். ஒரு பகுதியினர் மன்னார் மந்தை பகுதியில் இருந்து வந்து குடியேறினர் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஊர்காவற்றுறை கிழக்கு, ஊர்காவற்றுறை மேற்கு ஆகிய இடங்களில் வாழும் மக்களுக்கு மன்னார்த் தொடர்புகள் இருப்பதாகத் தெரிகின்றது. எவ்வாறாயினும் 1990 வரை பல சமூகத்தையும் சேர்ந்த பன்னீராயிரம் மக்கள் ஊர்காவற்றுறை பட்டின எல்லைக்குள் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. கத்தோலிக்கரை பெரும்பான்மையாக கொண்ட இச்சனத் தொகை முக்கிய நான்கு சமூகத்தினரை அடக்கியுள்ளது என்பதற்கு இங்குள்ள நான்கு ஆலயங்கள் சான்று பகருகின்றன. ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூறின் அவலங்கள் ஊர்காவற்றுறை 1947ம் ஆண்டில் பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றது. ஐந்து வட்டாரப் பிரிவுகளை அடக்கிய பட்டினப் பரிபாலனம் இங்கிருந்தது. பல வழிகளில் துரிதமாக முன்னேறி வளர்ந்துகொண்டிருந்த காவலூர் எவருமே எதிர்பாராது 1990ம் ஆண்டு ஆவணி 22ல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையால் உலகப்போரில் அகப்பட்ட ஜேர்மனி நாட்டைப்போலவும், அணுகுண்டு வீசப்பட்ட நாகசாக்கி நகரத்தைப் போலும் சிதைந்து அழிந்த நிலையில் இன்று காட்சி தருகிறது. குண்டு வீச்சு, ஷெல் வீச்சுகளாலும், கடற்படைப் பீரங்கி வேட்டுக்களாலும், சிதைந்த கட்டடங்கள், புள்டோசர் போட்டு மிதித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், அரச அலுவலகங்கள் என்பவற்றுடன் அநேக வீடுகளின் சுற்றுமதில்களும், சிதைந்து புதர்மண்டிக் காடுகள் வளர்ந்ததுபோல் மரங்கள் வளர்ந்து மூடிப் பல வீடுகள் அடையாளங் காணமுடியாத படி காட்ச்சி தருகின்றன. 1984க்குப் பின் நீதி மன்றம், பழைய பொலிஸ் நிலையம், புதிய பொலிஸ் நிலையம், வாடி வீடு என்பன தீவிரவாத சக்திகளால், அவை எதிரிகள் வசமாகாதவாறு தகர்க்கப்பட்டன. ஆனால் 1990 புரட்டாதியில் காவலூர் புதிய தபாலகம் உட்பட பல அரச நிறுவனங்கள், சந்தைக் கட்டடங்கள், மக்கள் குடியிருப்பு மனைகள் என்பன அரச படைகளால் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. இறங்குதுறை மண்டபம் தகர்ந்து, துறைமுகப் பாலம் சிதைந்து காட்சி தருகிறது. வீடுகள் பல சுவர்களோடும், கூரைகளோடும் நின்றாலும், கதவுகளும், யன்னல்களும் இல்லாது பாழைடைந்த வீடுகளாய் தோற்றமளிக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்த விலைமதிப்பற்ற தளபாடங்களும், பெறுமதிமிக்க பொருட்களும் சூறையாடப்பட்டன. அமைதியில் வாழ்ந்த காவலூர் முந்திய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தப்பியிருந்த போதிலும் 1990ம் ஆண்டு புரட்டாதி இருபத்தெட்டில் வரலாறு காணாத பேரழிவை எதிர்கொண்டு, மக்கள் சொந்த மண்ணை விட்டு நிலைகுலைந்து, நிர்க்கதியாய், அகதிகளாய் அடைக்கலம் புகுந்து, சொத்துக்களை இழந்தாலும், சுகத்தை இழ்ந்தாலும், உயிரையாவது காப்பாற்றிக்கொண்டால், என்றோ ஒருநாள் மீண்டும் தமது வதிவிடங்களுக்குத் திரும்பலாம் என்று தவித்து நின்றனர். ஆனால் அடைக்கலம் நாடிப் புலம்பெயர்ந்த இடங்களில் அவர்கள் ஆறு மாதங்கள் கூட நிமதிப் பெருமூச்சு விட்டிருக்க காலம் இடம்தரவில்லை. மக்களைத் துரத்திய 1991 1991ம் ஆண்டு சித்திரை மாதத்தில் காவலூரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுடன், அடைகலம் தந்தவர்களும் சேர்ந்து லைடன் தீவைவிட்டே வெளியேறி குடாநாட்டை நோக்கி இடம்பெயர்ந்த அவலங்களைப் பெரிய ஒரு நூலாக எழுதலாம். இராணுவ நடவடிக்கைகள் காரணமாக லைடந்தீவு, புங்குடுதீவு, மண்டைதீவு மக்கள் 75,000 பேர் குடாநாட்டை நோக்கிப் படையெடுத்தனர். எகிப்திலிருந்து இஸ்றாயேல் மக்கள் இரவோடு இரவாகப் புலம்பெயர்ந்தபோது நிகழ்ந்த ஆறாத்துயரங்கள் போன்று தீவக மக்களும் தாங்கமுடியாத வேதனைகளை அனுபவித்தனர். காவலூர் மக்களும் இதில் அடங்குவர். கத்தோலிக்க மறைத் தொண்டர்களும், குருமாரும், மனித முன்னேற்ற நடுநிலையமும், பங்குத் தந்தையர்களும், அரச்சார்பற்ற தாபனங்களும் அந்தக் காலப் பகுதியில் ஆற்றிய மனிதநேயப் பணிகளால் லைடந்தீவு மக்கள் தம் உயிரையாவது காப்பாற்ற முடிந்தது என்றால் மிகையில்லை. எனினும் இக்காலப் பகுதியில் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடுகள் என்பவற்றின் விளைவாகப் பலர் உயிரிழந்தனர். சிலர் அங்கவீனமாகினர். பல குடும்பங்கள் அவ்வாறான சோக அவலங்களைச் சுமந்து இன்றுவரை துன்பக் கடலில் தத்தழித்து மீள முடியாத இழப்புக்களை எதிர்கொண்டு வாழ்கின்றனர். |
இராவணன் பாலம் கடலுக்குள் கம்பீரமாக வீற்றிருக்கும் ஊர்காவற்துறை கடல்கோட்டை பல உயீர்களை பலியேடுத்து தன்னிகரில்லா தலைவனாக கடலுக்கள் அழகுசேர்க்கும். வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹாமன்கில் கோட்டையும் முக்கியமானது. இக்கோட்டையானது பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக ஊர்காவற்றுறை காரைநகரினைப் பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கேயர்களால் கட்டப்பட்டதாகும். ஐரோப்பியரது ஆதிக்கத்தின் சின்னமாகக் காணப்படுகின்ற இக்கோட்டையானது ஊர்காவற்றுறையின் அமைவிடம் காரணமாக அமைக்கப்பட்டதனைக் காணலாம். இக்கோட்டையானது முதன் முதலில் அமிநால் - டெமன்சில் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17ஆம் நூறற்hண்டில் கட்டப்பட்டமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. புராதான காலம் தொட்டே இலங்கையின் வடபுலத்தில் சிறப்பிடம் பெற்ற துறைமுகமாக ஊர்காவற்றுறை விளங்கியமையைக் காணலாம். சிறப்பாக கி.பி 10ஆம் நூற்றாண்டில் இலங்கை மீது படையெடுத்த சோழ அரசன் தன் படைகளை ஊர்காவற்றுறையூடாக நகர்த்தியிருந்தமையும் அவனது கல்வெட்டு ஒன்று இக்கோட்டையிலிருந்து மீட்கப்பட்டமையும் இப்பிரதேசத்தினுடைய வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தி அவற்றுக்கு சான்று பகிர்ந்து நிற்கின்றன. இப்பிரதேசததினது முக்கியத்துவம் உணரப்பட்டே 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் இங்கு கோட்டை அமைக்கப்பட்டது. இக்கடற்கோட்டையில் இங்கு சோழர் காலத்திற்குரிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டமையானது சோழர் ஆதிக்கம் இங்கு நிலவியமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இக்கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும். இந்தியாவுக்குமிடையே செல்லும் கப்பல்களை அவதானிப்பதே முக்கிய நோக்காகக் காணப்பட்டது. சோழர்கள் ஊர்காவற்றுறை காரைதீவுக் கடற்பரப்பைத் தங்கள் முக்கிய கடற்படைத் தளமாகக் கொண்டிருந்ததைப்போல் போர்த்துக்கேயர்களும் இக்கடற்பரப்பை முக்கிய காவற்தளமாகக் கொண்டிருந்தனர். பன்றியின் கால் வடிவத்திலே இக்கோட்டை அமைந்துள்ளமையால் ஹாமான்கீல் என ஒல்லாந்தர்கள் தமது மொழியிலே அழைத்தனர். இப்பெயரே இன்றும் நிலைத்துள்ளது. மேலும் இக்கோட்டையானது மிகப்பழமை வாய்ந்த வியாவில் ஐயனார் கோவில், களபூமி பாலாவோடை அம்மன் கோவில், மணற்காடு மாரியம்மன் கோவில் ஆகியவற்றை உடைத்த கற்களைக் கொண்டே கட்டப்பட்டதாக யாழ்ப்பாண வைபவகௌமுகியும், காரைநகர் மான்மியமும் குறிப்பிடுகின்றன. ஈழத்தின் வரலாற்று பகிர்வு (tharukaparanthan.blogspot.com) |
2018
1953
Sinnamadu - Devotion to Our Lady
(Copied from "XXV Years' Catholic Progress" written by Rev. S. Gnana Prakasar OMI, published in 1925)
The saintly Father, later on, Monsignor Vistarini, when in charge of the Islands off Jaffna had baptised some people in the village called Saravani. Living ay some distance from existing churches, these neophytes had neglected their religious duties and partly fallen back. Fr. Sandrasagara, like the great organiser that he was set about first to put up a school for the children in the vicinity (1894) and then to have a church founded for the scattered flock.
On 14 July 1895 the first Mass was said in the new cadjan structure erected for the Christians of Saravani when and on the occasion of the second Mass on 4 August thirty three new converts were baptised. The new church, dedicated to our Lady of the Rosary soon began to attract the Christians of the Islands by the many spiritual favours granted to those who prayed in it. From March 1896 bands of people were often seen wending their way towards the new sanctuary in procession, reciting the Rosary and singing the Litany of Our Lady of the Rosary. In fact the entire population of the Islands was astir demonstrations of piety towards the Mother of God, and every Saturday looked like a feast day in the once obscure spot amid open fields and like a desert, without shade, without water and without any other attraction but that of the Virgin most powerful who had deigned to shower her favours there. And ere long the fame of the sanctuary spread throughout the entire diocese and brought pilgrims even from the other dioceses of Ceylon. The 'vox popull' did not hesitate to call the sanctuary Sinna Madu. ie. Madu in miniature and the Bishop, recognising the finger of God in this marvellous development , gave his approval to the new pilgrimage in 1009.
From 1896 the feast has been celebrated on 5 August every year. On the first feast day after High Mass there sat for Virunthu or Agape 6,000 people of all castes and creeds. The following year there were as many as 13,000 pilgrims, the number reaching 15,000 in some years. Sinnamadu continues to attract pious pilgrims all the year round and to be a centre of fervent devotion to Our Lady.
First shed in1895, priests' bungalow and out-houses built in 1097 under Fr. Dourat cost Rs. 3,200. Later on, a bungalow for pilgrims at a cost of Rs. 600 of which Rs. 400 was furnished by the Late Mr. S. C. Ponniah then of the federated Malay Street. The church compound has also been gradually extended and now comprises 16 acres for which the diocese paid Rs. 2,300. The upkeep of the property and church costs Rs. 500 annually. A new structure, to serve first as a provisional churchand then as a bungalow, is now in progress, a sum of Rs. 1,000having been already spent on it.
Other shrines of Our Lady annually visited by pious devotees bare Arokya Matha in Nanaddan (Mantote), Kallarai Matha in the church of St. Anne, Ilavalai, and Kala Oya (founded in 1902).
Nalloor Swami Gnana Prakasar. 1925
On 14 July 1895 the first Mass was said in the new cadjan structure erected for the Christians of Saravani when and on the occasion of the second Mass on 4 August thirty three new converts were baptised. The new church, dedicated to our Lady of the Rosary soon began to attract the Christians of the Islands by the many spiritual favours granted to those who prayed in it. From March 1896 bands of people were often seen wending their way towards the new sanctuary in procession, reciting the Rosary and singing the Litany of Our Lady of the Rosary. In fact the entire population of the Islands was astir demonstrations of piety towards the Mother of God, and every Saturday looked like a feast day in the once obscure spot amid open fields and like a desert, without shade, without water and without any other attraction but that of the Virgin most powerful who had deigned to shower her favours there. And ere long the fame of the sanctuary spread throughout the entire diocese and brought pilgrims even from the other dioceses of Ceylon. The 'vox popull' did not hesitate to call the sanctuary Sinna Madu. ie. Madu in miniature and the Bishop, recognising the finger of God in this marvellous development , gave his approval to the new pilgrimage in 1009.
From 1896 the feast has been celebrated on 5 August every year. On the first feast day after High Mass there sat for Virunthu or Agape 6,000 people of all castes and creeds. The following year there were as many as 13,000 pilgrims, the number reaching 15,000 in some years. Sinnamadu continues to attract pious pilgrims all the year round and to be a centre of fervent devotion to Our Lady.
First shed in1895, priests' bungalow and out-houses built in 1097 under Fr. Dourat cost Rs. 3,200. Later on, a bungalow for pilgrims at a cost of Rs. 600 of which Rs. 400 was furnished by the Late Mr. S. C. Ponniah then of the federated Malay Street. The church compound has also been gradually extended and now comprises 16 acres for which the diocese paid Rs. 2,300. The upkeep of the property and church costs Rs. 500 annually. A new structure, to serve first as a provisional churchand then as a bungalow, is now in progress, a sum of Rs. 1,000having been already spent on it.
Other shrines of Our Lady annually visited by pious devotees bare Arokya Matha in Nanaddan (Mantote), Kallarai Matha in the church of St. Anne, Ilavalai, and Kala Oya (founded in 1902).
Nalloor Swami Gnana Prakasar. 1925